Friday, April 17, 2015

ஊழல் மலிந்த ஹிட்லரின் ஆட்சி



ஹிட்லர் அனுதாபிகளான அனைத்து பாசிஸ்டுகளுக்கும்: 
"உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். தவழவும் முடியா விட்டால் தற்கொலை செய்து கொள்ளுங்கள். அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது."


ஜெர்மன் நாஸிகள் "ஊழலற்ற ஆட்சி" நடத்தியதாக புளுகித் திரியும், தமிழ் பேசும் நாஸி அபிமானிகள் பலர் இருக்கின்றனர். "வெள்ளை ஐரோப்பியர்கள் ஊழல் செய்வதில்லை" என்று அப்பாவித்தனமாக நினைத்துக் கொண்டிருக்கும் பாமர மக்கள் அதை நம்பலாம்.

ஜெர்மன் வரலாற்றிலேயே நாஸிகளின் ஆட்சிக் காலம் தான் ஊழல் மலிந்திருந்த காலகட்டம். ஹிட்லர் முதல் அடிமட்ட அதிகாரி வரையில் மிகப்பெரிய ஊழல் பெருச்சாளிகளாக இருந்தனர்.

 ஹிட்லர், 1933 ம் ஆண்டு, ஆட்சியைக் கைப்பற்றும் நேரம், ஜெர்மன் அரசுக்கு பல இலட்சம் வரி இன்னும் கட்டப்படாமல் நிலுவையில் இருந்தது. அவரது "மைன் கம்ப்" நூலுக்கான வரியே கட்டப் படாமல் இருந்தது. பதவிக்கு வந்த ஹிட்லர், வருமான வரித் திணைக்கள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அந்த வரியை இல்லாதாக்கினார். அது மட்டுமல்ல, அடுத்து வந்த வருடங்களில் விற்கப் பட்ட மைன் கம்ப் நூல் பிரதிகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப் பட்டது. அந்தப் பணத்தை எல்லாம் ஹிட்லர் தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார்.

ஐரோப்பாவில் போர் நடந்து கொண்டிருந்த காலங்களிலும், நாஸி அதிகாரிகள் ஊழலில் திளைத்தார்கள். போர்முனையில் நின்ற ஜெர்மன் படையினருக்கு அனுப்ப வேண்டிய பெட்ரோல், உணவுப் பொருட்களை திருடி கறுப்புச் சந்தையில் விற்றார்கள். 1944 ஆம் ஆண்டு, நார்மாண்டி கடற்கரையில் நின்ற யுத்த தாங்கிகளுக்கு பெட்ரோல் இல்லாத காரணத்தால், படையினர் பின்வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில், பாரிஸ் கள்ளச் சந்தையில் பெட்ரோல் விற்கப் பட்டுக் கொண்டிருந்தது.

யூதர்கள் அவர்கள் வசித்த வீடுகளில் இருந்து தடுப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப் பட்ட நேரம், யூதர்களின் சொத்துக்களை திருடுவதில் ஜெர்மன் அதிகாரிகள் மும்முரம் காட்டினார்கள். தமது வாழ்நாளில் இது போன்ற தளபாடங்களை காணவில்லை என்று, அவற்றை தமது வீடுகளுக்கு திருடிச் சென்ற அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.

ஹிட்லரின் வலதுகரமாக விளங்கிய இராணுவத் தளபதி ஹெர்மன் கெரிங், ஒரே நேரத்தில் பல பதவிகளை வகித்து வந்தார். பிரைசன் மாநில முதலமைச்சர், பொருளாதார அமைச்சர், பாராளுமன்றத் தலைவர்... இப்படிப் பல பதவிகள் காகிதத்தில் மட்டும் இருந்துள்ளன. அதற்கெல்லாம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். 

அது மட்டுமல்ல, உலகப் புகழ் பெற்ற ஜெர்மன் வாகன தயாரிப்பாளர்களான BMW, Benz நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கி வைத்திருந்தார். கெரிங்கின் அன்றைய வருட வருமானம் 1250000 மார்க்குகள். அதே நேரம், ஜெர்மனியில் ஒரு தொழிலாளரின் வருடாந்த வருமானம் 5000 மார்க்குகளுக்கு மேலே கூடவில்லை.

ஜெர்மன் அரசாங்கத்தின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு, நாஸிகளின் ஆட்சிக் காலத்தில் தான் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடியது. பெரும்பாலும் அதிகாரத்தில் இருந்தவர்களின் நண்பர்கள், உறவினர்களுக்குத் தான் அரசுப் பதவிகள் கொடுக்கப் பட்டன. ஜெர்மனி முழுவதும் வேலை வாய்ப்புக் கிடைக்க வேண்டுமானால் மேலிடத்தில் உள்ளவரைத் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.

(நன்றி : Historia, Nr.1/2015)



கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் எப்படியானவர்கள்? 
- பாசிஸ்டுகள் 
 - நாஸிகள் 
 - இனவெறியர்கள் 
 - மதவெறியர்கள் 
 - இனப்படுகொலையாளிகள் 
 - போர்க்குற்றவாளிகள் 
அல்லது அப்படியானவர்களை ஆதரிக்கும் மேட்டுக்குடி அறிவுஜீவிகள்.

No comments: