Tuesday, March 31, 2015

ஹொண்டூரஸ் ஏழை மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டம்



ஹொண்டூரஸ் நாட்டில், அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராடிய நான்கு பாடசாலை மாணவர் தலைவர்கள், கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அங்கு மக்கள் பெருமளவில் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

புதிய கல்விக் கொள்கையின் படி, கல்விக்கான அரசு செலவினம் குறைக்கப் படுவதுடன், பாடசாலை முடியும் நேரமும் மாற்றப் பட்டுள்ளது. இதனால், மாலை நேரம் பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்லும் ஏழை மாணவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படும். 

பொதுப் போக்குவரத்து மிகவும் குறைவாக உள்ளது மட்டுமல்ல, குற்றச் செயல்கள் அதிகமாக நடக்கும் ஆபத்தான இடங்களுக்கு ஊடாக செல்ல வேண்டுமென அஞ்சுகின்றனர். ஏழை மாணவர்கள் படிக்க விடாமல் தடுக்கும் அரசின் திட்டமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

வெனிசுவேலாவில் ஆர்ப்பாட்டம் நடந்தால், அதனை தினந்தோறும் விரிவாக அறிவிக்கும் CNN போன்ற ஊடகங்கள், இன்னொரு லத்தீன் அமெரிக்க நாடான ஹொண்டூரஸ் பக்கம் திரும்பியும் பார்க்காத காரணம் என்னவோ?

Assassination of 4 Student Leaders in Honduras Prompts Protests

********


23 மார்ச், கனடாவில், பிரெஞ்சு பேசும் கியூபெக் நகரில், இலட்சக் கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி இடம்பெற்றது. கல்விக்கான செலவினத்தை குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து மாணவர்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். அன்றிலிருந்து 15 நாட்கள் வகுப்புகளை பகிஷ்கரிக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த வருடம் வரும் மே தினத்தன்று, தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு, மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.

Quebec City protesters shot directly with tear gas

No comments: