Sunday, March 29, 2015

லீகுவான்யூவின் கொடுங்கோன்மை : சிங்கப்பூரில் தடை செய்யப் பட்டுள்ள ஆவணப் படம்

(எச்சரிக்கை: சிங்கப்பூரில் இருப்பவர்கள் இந்தப் பதிவையும், வீடியோவையும் பார்வையிட முடியாதவாறு தடை செய்யப் பட்டிருக்கலாம்.) 

சிங்கப்பூரின் மறைந்த சர்வாதிகாரி லீகுவான்யூவின் கொடுங்கோல் ஆட்சியை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறும் ஆவணப்படம். இது போன்ற எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும், ராஜபக்சே, லீகுவான்யூ போன்ற சர்வாதிகாரிகளுக்கு அடிவருடிப் பிழைக்கும், அடிமை விசுவாசிகளுக்கு உறைக்கப் போவதில்லை.

சிங்கப்பூர் அரசு நீண்ட காலமாக தனது பிரஜைகளுக்கு கருத்துச் சுதந்திரத்தை மறுத்து வந்துள்ளது. உள்ளூர் ஊடகங்கள் லீ அரசுக்கு எதிராக எதையும் கூற முடியாது என்பது தெரிந்ததே. ஆனால், வெளிநாட்டு ஊடகங்களை கட்டுப்படுத்துவது கடினமானது. அப்படி நீங்கள் நினைக்கலாம். ஆனால், லீ அதற்கும் வழி கண்டுபிடித்திருக்கிறார். வெளிநாட்டு ஊடகங்கள் மீது அவதூறு வழக்குத் தொடுத்து, பெருமளவு பணத்தை தண்டமாகக் கட்ட வைத்து, வாயை மூடப் பண்ணியுள்ளார்.

இலங்கையில் அரச எதிர்ப்பாளர்களையும், ஈழப் போராட்டத்தையும் நசுக்குவதற்கு PTA எனும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயன்படுத்தப் பட்டது. சிறிலங்கா அடக்குமுறை அரசு, அவசரகால சட்டத்தின் மூலம், விசாரணை இல்லாமல், காலவரையறையின்றி தடுத்து வைத்து சித்திரவதை செய்தது. சிங்கப்பூரில் லீயின் அரசு ISA எனும் அடக்குமுறை சட்டத்தை பிரயோகித்து, எதிர்ப்பாளர்களை ஒடுக்கியது. ஆரம்பத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட ISA சட்டம், பின்னர் லீ எதிர்ப்பாளர்களை நசுக்குவதற்கு பயன்பட்டது. அரசை கவிழ்க்க சூழ்ச்சி செய்த குற்றச்சாட்டில், அடிக்கடி பலர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தேர்தலில் லீயின் PAP கட்சிக்கே அனைத்து வாக்காளர்களும் ஓட்டுப் போட வைக்கப் பட்டது எப்படி? சேரிகளில் வாழ்ந்த மக்களுக்கு பண முடிப்புகளும், அரச செலவில் வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. அதற்கும் பணியாதவர்கள் மீது பொலிஸ் அடக்குமுறை ஏவி விடப் பட்டது.

இந்திய அரசியல் அலங்கோலங்களை விட மிகவும் மோசமாக சிங்கப்பூரில் நடந்துள்ளது. லீகுவான்யூ ஒரு "சிங்கப்பூர் ராஜபக்சே" மட்டுமல்ல, அதற்கும் மேலே...

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

One Nation Under Lee (complete video) 

1 comment:

வலிப்போக்கன் said...

புருஸ்லீ தன் எதிரிகளை பழிக்குபழி வாங்குவது போல் சிங்கப்பூர் லீ தனது எதிரிகளை பழிவாங்கினார் என்று கொள்ளலாமா....?