Thursday, April 03, 2014

ஈழ இனப்படுகொலைக்காக கம்யூனிசத்தை கழுவேற்றும் நாஸி வாரிசுகள்












ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்காக, "கம்யூனிச கோட்பாட்டை, மார்க்சியத்தை கழுவில் ஏற்ற துடிக்கும்" அன்பர்கள், ஹிட்லர் எழுதிய மைன் கம்ப் (Mein Kampf) நூலை வாசிக்க வேண்டுமென பரிந்துரைக்கிறேன். முதலாம் உலகப்போரில், ஜெர்மனியில் நடந்த இனப்படுகொலைக்காக, "யூதர்களையும், கம்யூனிச கோட்பாட்டையும், மார்க்சியத்தையும் கழுவில் ஏற்ற வேண்டும்" என்று ஹிட்லர் பிரச்சாரம் செய்து வந்தான். அதனை "Mein Kampf" நூலிலும் எழுதி இருக்கிறான்.

"ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை, உலக நாட்டு மக்கள் அத்தனை பேரும் கண்டிக்க வேண்டும்" என்று எதிர்பார்க்கும் தமிழ் இன உணர்வாளர்கள், அதனை மேற்கத்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடைமுறைக்கு கொண்டு வர முடியாது. அவர்கள் முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
மேற்கத்திய முதலாளித்துவ நலன் சார்ந்த சட்டம் எதுவும், இனப்படுகொலைகளை தடுப்பதற்காக எழுதப் பட்டதல்ல. 

யூத இனப்படுகொலையை விசாரித்து தண்டிப்பதற்காக உருவாக்கப்பட்ட  நியூரன்பேர்க் நீதிமன்றம் கூட, மிகவும் குறைந்தளவு நாஸி குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கியது. யூத இனப்படுகொலையில் ஈடுபட்ட பெரும்பான்மையான நாஸிகள், அமெரிக்காவிலும், பிற மேலைத்தேய நாடுகளிலும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று? சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பினார்கள் என்று சாமானியர்களின் மொழியில் கூறலாம்.

உண்மையில், மேற்கத்திய சட்டம் எப்போதும் ஆதாரங்களை வைத்துக் கொண்டு தான் தண்டனை வழங்கும். ஆதாரம், சாட்சிகள் இல்லாவிட்டால், எந்தக் குற்றவாளியும் தப்பி விடலாம். இதனால், சோஷலிச நாடாக இருந்த கிழக்கு ஜெர்மனியில் ஒரு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்தார்கள். ஒருவர் தனது "மனச் சாட்சிக்கு விரோதமாக நடந்தாலும் குற்றம் தான்" என்ற சட்டம், விசேடமாக நாஸிஸ ஒழிப்பிற்காக இயற்றப் பட்டது. 

அதாவது "சுடச் சொல்லி உத்தரவு வந்ததால் சுட்டேன்... என்னிடம் நிறைவேற்று அதிகாரம் இருக்கவில்லை... எனது கடமையை மட்டும் செய்தேன்..." யாரும் இவ்வாறு சாட்டுச் சொல்லித் தப்ப முடியாது. அதாவது, "மனச் சாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்வதும் குற்றமாகும்." என்று சோஷலிச சட்டத்திருத்தம் கூறுகின்றது.

மேற்கு ஜெர்மனியை விட, கிழக்கு ஜெர்மனியில் தான் இனப்படுகொலை குற்றச்சாட்டில் பெருமளவு நாஸிகள் தண்டிக்கப் பட்டனர். நாசிசம் முற்றாக அழித்தொழிக்கப் பட்டது. ஆனால், மேற்கு ஜெர்மனியில்? முன்னாள் நாஸிகள் பலர் சுதந்திரமாகத் திரிந்தனர். அரசாங்கத்தில் மட்டுமல்லாது, வணிக நிறுவனங்கள், கல்விச்சாலைகள் எல்லா இடங்களிலும் இனப்படுகொலை குற்றவாளிகளான முன்னாள் நாஸிகள் தொடர்ந்தும் பதவிகளில் அமர்ந்திருந்தார்கள். கிழக்கு ஜெர்மனியில் நாஸிகளுடன் தொடர்புடைய கொள்கைகள் அனைத்தும், சட்டம் போட்டு தடை செய்யப் பட்ட பின்னர் தான் மேற்கு ஜெர்மனியும் தன் பங்கிற்கு சில மாற்றங்களை கொண்டு வந்தது.

மேற்கு, கிழக்கு ஜெர்மனிகள் இரண்டிலும், "யூத இனப்படுகொலை நடக்கவில்லை என்று மறுப்பது" ஒரு தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இன்றைக்கும் ஒன்றிணைந்த ஜெர்மனியில் அந்த சட்டம் அமுலில் உள்ளது. அதனால் தான் அங்கே ஜெர்மன் தேசியவாத சக்திகள், அரசியலில் மிகவும் பலவீனமாக உள்ளன.  

இனப்படுகொலைகளுக்கு எதிரான சர்வதேச சட்டத்தில், கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ள விரும்பாத, மேற்கத்திய- முதலாளித்துவ அடிவருடிகள் மட்டுமே, ஈழ இனப்படுகொலைக்காக கம்யூனிசத்தை கழுவேற்றத் துடிக்கின்றனர்.  உண்மையில் அன்று ஒரு சோஷலிச ஜெர்மனி தோன்றியிரா விட்டால், இன்றைக்கும் நாஸிஸம் ஜெர்மனியையும், ஐரோப்பாவையும் ஆட்டிப் படைத்திருக்கும். சிலநேரம், இனப்படுகொலை என்ற சொல் கூட அகராதியில் இடம்பெற்றிருக்காது. 

நாசிஸம் தான், ஸ்டாலின் மீதான அவதூறுகளின் ஊற்றுக்கண். அது மட்டுமல்ல, இன்றைய கம்யூனிச விரோதிகளின் ஆதர்ச நாயகர்களாகவும், கொள்கை வகுப்பாளர்களாகவும், ஜெர்மன் நாஸிகளே இருந்து வருகின்றனர்.

ஹிட்லர் தான், முதன்முதலாக கம்யூனிசத்திற்கு எதிரான "உளவியல் யுத்தம்" ஒன்றை ஆரம்பித்து வைத்தான். இன்று ஹிட்லரின் வாரிசுகள் அந்தக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். கம்யூனிச பூச்சாண்டி காட்டி, அப்பாவித் தமிழ் மக்களை பயமுறுத்தி வருகின்றனர்.

நவ நாஸிகளும், முதலாளித்துவவாதிகளும், ட்ராஸ்கிஸ்டுகளும், நாஸிகளின் பிரச்சாரத்தை இணைய யுகத்திலும் முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றனர். பாசிசம் இன்னும் அழியவில்லை. அது பன்முகத் தன்மை வாய்ந்ததாக மாறி உள்ளது.

சோவியத் யூனியனில் நடந்த பட்டினிச் சாவுகள், ஸ்டாலினின் படுகொலைகள், இது போன்ற பல விபரங்களை முதன் முதலாக பிரச்சார நோக்கில் "ஆவணமாக" தொகுத்து வெளியிட்டவர்கள் நாஸிகள் தான். நாஸிகள் தமது அரசியல் பிரச்சாரத்திற்காக வெளியிட்ட "ஆவணங்கள்" இன்றைக்கும் பலரால் மேற்கோள் காட்டப் படுகின்றன. பலர் அவற்றின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்வதில்லை. நாஸிகள் என்ன சொன்னார்களோ அதை வாய்ப்பாடாக அப்படியே ஒப்புவிக்கிறார்கள். இதெல்லாம் ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயங்கள்.

நாஸி ஜெர்மனியிடம் நிறைய ஆவணங்கள் இருந்தன. 2 ம் உலகப் போரில், நாஸி ஜெர்மனி சிறிது காலம் சோவியத் யூனியனின் பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருந்தது என்பதை மறந்து விடக் கூடாது. அதற்கு முன்பிருந்தே, நாஸிகள் சோவியத் எதிர்ப்பு பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டார்கள். ரஷ்யாவை ஆக்கிரமித்து, அதனை ஜெர்மனியின் காலனி ஆக்குவது, ஹிட்லரின் நோக்கமாக இருந்தது. இது ஒன்றும் இரகசியம் அல்ல. மைன் கம்ப் நூலில் ஹிட்லர் அதைப் பற்றி எழுதி இருக்கிறான்.

சோவியத் யூனியன், ஸ்டாலின் தொடர்பாக நாசிகளிடம் இருந்த பிரச்ச்சார ஆவணங்களை, 2 ம் உலகப்போரில் ஜெர்மனியை ஆக்கிரமித்த அமெரிக்கப் படைகள் அபகரித்துச் சென்றன. அதற்குப் பிறகு தான், அவை உலகம் முழுவதும் பரப்பப் பட்டன. இன்றைக்கும் பலருக்கு அவை நாஸிகளின் பிரச்சார ஆவணங்கள் என்ற உண்மை தெரியாது. அவற்றை நம்புவோர் எல்லோரும் நாஸிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவற்றை உருவாக்கியவர்கள் நாஸிகள் என்பதையாவது அறிந்து வைத்திருக்கக் கூடாதா?

2 ம் உலகப்போர் முடிந்த பின்னர், நாஸி அறிவுஜீவிகளுக்கு அமெரிக்காவில் பதவிகள் வழங்கப் பட்டன. முன்னர் நாஸி அரசாங்கத்தில் பல கொடுமைகளை புரிந்தவர்கள் கூட, அமெரிக்காவில் நன்றாக கவனிக்கப் பட்டனர். எத்தனை நாஸிகள் நாஸாவில், சி.ஐ.ஏ. யில் வேலை செய்தார்கள் என்பது பற்றி நிறைய ஆதாரங்கள் வெளிவந்துள்ளன. அது பற்றிய விபரங்கள் அடங்கிய, நூல்கள் பல வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பாக விற்பனையாகின.

"ஸ்டாலினின் கொடுங்கோன்மை, கம்யூனிச பயங்கரம், கம்யூனிஸ்டுகளின் படுகொலைகள், கம்யூனிஸ்டுகள் செய்த அக்கிரமங்கள்...." இது போன்ற பல "அதிர்ச்சித்" தகவல்களை, முதன்முதலாக நாஸிகள் தான் "ஆவணப் படுத்தி ஆதாரங்களுடன் கூறுவதாக" தெரிவித்து வந்தனர். இதனை நான் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த உண்மை. "சோவியத் கம்யூனிஸ்டுகளின் கொடுங்கோன்மை" பற்றிய ஆதாரங்களின் மூலம் (source) எங்கே இருந்து வந்தன என்று தேடிப் பாருங்கள். அப்போது தெரியும்.

இன்று சில முதலாளித்துவ அல்லது மேற்கத்திய ஆதரவாளர்கள், கேரத் ஜோன்ஸ் போன்ற சில பிரிட்டிஷ், அமெரிக்க ஊடகவியலாளர்களின் எழுத்துக்களை மேற்கோள் காட்டி வருகின்றனர். உதாரணத்திற்கு, உக்ரைன் பஞ்சம் பற்றிய தகவல்களை மேற்குலகிற்கு அறிவித்த, கேரத் ஜோன்ஸ் (Gareth Jones) யாரென்று பார்ப்போம். அவர் ஒரு பிரிட்டிஷ் பிரஜை தான். ஆனால், அவருக்கும் நாஸி ஜெர்மனிக்கும் என்ன தொடர்பு? அதைப் பற்றியும் கொஞ்சம் எழுதலாமே? ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பின்னர், இவரை சோவியத் யூனியனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதற்குப் பிறகு தான், உக்ரைன் பஞ்சம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அந்த பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒரு நாஸி அபிமானி என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப் பட்ட விடயம். அதனை அவரே மறுக்கவில்லை. நாஸிகள் தான் அவரை சோவியத் யூனியனுக்கு அனுப்பி, பஞ்சம் பற்றிய அறிக்கை தயாரிக்க சொல்லி இருக்கிறார்கள். 
அதற்கான ஆதாரம் இதோ:

 //In January 1933, Jones travelled to Germany to report on the growth of the Nazi Party. George Carey has argued that Adolf Hitler saw him as a friendly journalist: "It's certainly true to say that Gareth Jones networked extremely well with the Nazis, and secured almost unprecedented access to Hitler and Goebbels. He was there in Leipzig when Hitler was made chancellor, and flew with him to Frankfurt for his first rally. And it's also fair to say that he reported favourably on some of the early achievements of the Nazis, creating employment when mainstream politicians had failed to get to grips with the German economy." 

The following month he visited the Soviet Union and on the 31st March, 1933, The Evening Standard carried a report by Jones on the conditions he discovered in the rural areas that he considered to be the result of Stalin's Five Year Plan: "The main result of the Five Year Plan has been the tragic ruin of Russian agriculture. This ruin I saw in its grim reality. I tramped through a number of villages in the snow of March. I saw children with swollen bellies. I slept in peasants’ huts, sometimes nine of us in one room. I talked to every peasant I met, and the general conclusion I draw is that the present state of Russian agriculture is already catastrophic but that in a year’s time its condition will have worsened tenfold... The Five-Year Plan has built many fine factories. But it is bread that makes factory wheels go round, and the Five-Year Plan has destroyed the bread-supplier of Russia."// 
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
1.நாஸிகளின் மார்க்ஸிய வெறுப்பு : ஒரு நூற்றாண்டு கால வரலாறு
2.கம்யூனிசம் ஈழப் போராட்டத்திற்கு ஒரு பின்னடைவா?

No comments: