Friday, October 01, 2010

எகுவடோரில் ஜனநாயக அரசைக் கவிழ்க்க சதி

"ஜனாதிபதியைக் கொல்வதற்கு உங்களுக்கு தைரியமிருந்தால் இங்கேயே இப்போதே என்னை கொலை செய்யுங்கள்." கலகம் செய்த போலிஸ் படையினருக்கு முன்னால் எக்குவடோர் ஜனாதிபதி கொறேயோஸ் ஆற்றிய உரை. ஜனாதிபதி பேசி முடிப்பதற்குள் கலகக்கார பொலிசாரின் கண்ணீர்ப் புகை வீச்சினால் காயமுற்று வைத்தியமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எக்குவடோர் இராணுவம் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், ஒரு சதிப்புரட்சி தடுக்கப்பட்டது.

எக்குவடோர் போலிஸ், பாதுகாப்புப் படைகள் இதுவரை காலமும் அனுபவித்து வந்த சலுகைகளை இரத்து செய்யும் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. தாம் அனுபவித்து வந்த வசதிகளையும், சலுகைகளையும் இழக்க விரும்பாத காவல்துறை திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கவிக்க எத்தனித்தது. கலகக்கார போலீசார் விமான நிலையத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர். இருப்பினும் இராணுவம் ஜனாதிபதி பக்கம் நின்றதால், சதிப்புரட்சி பிசுபிசுத்துப் போனது.

எகுவடோரின் மொத்த சனத்தொகையில் அரைவாசி செவ்விந்திய பூர்வீக மக்கள். 2007 ம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் ஏறிய இடதுசாரி ஜனாதிபதியான கொறேயோஸ், எக்குவடோர் நாட்டை சோஷலிச பாதையில் கொண்டு செல்ல விரும்பினார். அயல் நாடான வெனிசுவேலாவின் பொலிவார் சோஷலிஸ்ட் சாவேசுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். வெனிசுவேலா போலவே எக்குவடோர் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகும். இதனால் நேற்றைய சதிப்புரட்சியின் பின்னணியில் அமெரிக்காவின் கை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் ஜனநாயக விரோத சதிப்புரட்சியை கண்டித்துள்ளனர். இருப்பினும் ஜனநாயக காவலனான அமெரிக்க அரசு மௌனம் சாதிக்கின்றது. இதனை அவதானித்த கியூப வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், "சதிப்புரட்சியை கண்டிக்க முன்வருமாறு" அமெரிக்காவை அழைத்துள்ளார்.

Possible Correa coup involves US meddling?

வெனிசுவேலாவின் சர்வதேச தொலைக்காட்சி சேவையான Telesur எகுவடோரின் கடைசி செய்திகளை நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறது. இங்கேயுள்ள சுட்டியை அழுத்தவும்.

1 comment:

Unknown said...

மிக அருமையான பதிவு

http://denimmohan.blogspot.com/