Wednesday, February 17, 2010

பலர் அறியாத பபுவா விடுதலைப் போராட்டம்

2006 ம் ஆண்டு, இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் தப்பி வந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரிய பபுவா அகதிகள், ஒரு சர்வதேச நெருக்கடிக்கு காரணமாகினர். இந்தோனேசியாவின் ஒரு மாகாணமாக பலவந்தமாக இணைக்கப்பட்ட (மேற்கு) பபுவா மக்கள் தனி நாடு கோரிப் போராடி வருகின்றனர். இனத்தால், மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால், இந்தோனேசியர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் பபுவா பழங்குடியினர். இந்தோனேசிய ஆக்கிரமிப்பு இராணுவம் நவீன ஆயுதங்கள் சகிதம் அடக்கிய போதிலும், மக்களின் விடுதலை வேட்கையை தடுக்க முடியவில்லை. சுதந்திர பபுவா நாட்டின் விடிவெள்ளிக் கொடி ஏற்றுவது கூட தடை செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக காடுகளில் உறையும், "பபுவா விடுதலைப் படை". புராதன ஆயுதங்களால், பலம் வாய்ந்த இந்தோனேசிய இராணுவத்தை எதிர்க்க முடியாத இயலாமை. தனது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு ஆயுதப் போராட்டம் மட்டும் போதாது என்று உணர்ந்துள்ளது. அவர்களது ஒரேயொரு நம்பிக்கை, "சர்வதேச சமூகத்தின் தலையீடு". பபுவா பிரதேசத்தினுள் வெளிநாட்டு ஊடகங்கள் நுழைய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஒரு ஆவுஸ்திரேலிய ஊடகவியலாளரின் முயற்சியால், இரகசியமாக கடத்தப் பட்ட வீடியோ கமெராக்கள் மூலம் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.
Free West Papua

2 comments:

இ.அரவிந்த் said...

பகிர்வுக்கு நன்றி கலை!
தோழமையுடன் இ.அரவிந்த்...

Kalaiyarasan said...

நன்றி அரவிந்த்!