Friday, October 30, 2009

எல்லாம் வல்ல கூகிள் ஆண்டவர்

கூகிளுக்கும்(Google) புலனாய்வுத் துறைக்கும் இடையில் உள்ள இரகசியத் தொடர்பை ஆராயும் ஆவணப்படம். கூகிள் நிறுவனம் குடிமக்களை கண்காணிப்பதில் அரசுக்கு உதவி வருகின்றது.

Thursday, October 29, 2009

அழிவுகளில் இருந்து உயிர்த்தெழும் யாழ்ப்பாணம் (வீடியோ)

பல தசாப்த கால யுத்தத்தால் அழிவுக்குள்ளான யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளின் காட்சிப் படிமங்கள்.

Ruins of Northern Sri Lanka 2009 from shedali on Vimeo.

தமிழீழ சாத்தியம் குறித்த ஆரம்பகால விவாதங்கள்


- (புதிய பூமி பத்திரிகையில் "வெகுஜனன்" எழுதும் "வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை" கட்டுரைத் தொடர்.) -
வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை - பகுதி ஒன்றை இங்கே வாசிக்கலாம்.

திருமதி சிரிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சி செய்த 1970 தொடக்கம் 1977 வரையிலான காலப்பகுதியானது இன முரண்பாடு மேலும் விரிசல் அடையவும் பகை முரண்பாடாக வளர்ச்சி காணவும் பெரும் பங்கு அளித்தது. பாராளுமன்ற இடதுசாரிகள் எனப்பட்டவர்கள் அங்கம் வகித்த அவ்வரசாங்கம் முன்னெடுத்த பேரினவாத நோக்குடைய நடவடிக்கைகள் தமிழ்த் தேசியவாதப் பரப்பில் எதிர் அலைகளைத் தோற்றுவித்தன. பாராளுமன்றத் தலைமைகள் தமக்குரிய வாய்ப்புக்களைத் தேட ஆரம்பித்தனர். அதே வேளை தமிழ் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்களும் வன்முறைகளுக்கான வழிமுறைகளும் தோற்றம் பெற்றன.

1970இல் அவ்வரசாங்கம் பல்கலைக்கழகப் புகுமுக க.பொ.த. உயர்தரத்திற்கான புள்ளிகளை மொழி அடிப்படையில் தரப்படுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தது. அதனால் தமிழ் மாணவர்கள் குறிப்பாக கல்வித்துறையில் முன்னணி வகித்து வந்த யாழ்குடாநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். நகர் சார்ந்த மத்திய மேல்மட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்புகள் வந்ததுடன் முழுத் தமிழ் மாணவர்களினதும் பிரச்சினையாக வடிவம் பெற்றது. தமிழ்த் தேசியவாத அரசியல் சக்திகளின் பின்புலத்தில் தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. இதன் ஆரம்பத்தின் ஊடாகவே இக்கால தீவிர இளைஞர் இயக்கங்களில் முன்னணியில் நின்ற பலர் அரசியலில் பிரவேசித்தனர். இத்தரப்படுத்தலுக்கு எதிராக குடாநாடு தழுவிய ஒரு மாணவர் எழுச்சி ஊர்வலத்திற்கு தமிழ்மாணவர் பேரவை அழைப்பு விடுத்திருந்தது. 1970 நவம்பர் 24ஆந் திகதியன்று கொக்குவிலிருந்து ஆரம்பித்து யாழ் முற்றவெளிவரை நடைபெற ஏற்பாடாகியிருந்த அம் மாணவர் ஊர்வலத்திற்கு ஆரம்பத்திற் பொலிசார் அனுமதி மறுத்திருந்தனர். தமிழரசுக் கட்சியின் சில தலைவர்கள் அவ்வூர்வலத்தைக் கைவிடும்படி வற்புறுத்தியும் அது பலனளிக்கவில்லை. இறுதியில் மாணவர் தொகையையும் எழுச்சியையும் கண்ட பொலீஸ் அனுமதி வழங்கியது.

இவ் ஊர்வலத்தின் மாக்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பு கலந்து கொள்வதா இல்லையா எனும் விவாகத்தின் பின், தமிழ்த் தேசியவாதப் பின்னணி இருந்தபோதும், தரப்படுத்தல் இன ஒடுக்குமுறை சார்ந்த ஒன்று என்ற காரணத்தால் அது எதிர்க்கப்படுவதன் அடிப்படையில் கலந்து கொள்ள முடிவாகியது. அதனால் அவ்வமைப்பைச் சேர்ந்த பலநூற்றுக் கணக்கான இடதுசாரி மாணவர்கள் அவ்வூர்வலத்தில் கலந்து கொண்டனர். இக் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பானது 1969இன் தமிழரசு - காங்கிரஸ் இணைந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கல்வி அமைச்சர் இரிய கொல்லவால் அறிமுகப்படுத்தப்பட்ட 'சியவச" மாணவர் சீட்டிழுப்பை எதிர்த்த இயக்கத்தின் ஊடே தோற்றம் பெற்ற மாணவர் அமைப்பாகும். அக்கால கட்டத்தில் இவ்வமைப்பு 'தீ" என்னும் மாணவர் பத்திரிகையையும் நடாத்திப் பாடசாலைகளில் மாணவர்களின் ஆதரவைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதன் காரணமாகவே அதனை அன்றைய தமிழ் மாணவர் பேரவையினர் தமது பொதுவான மாணவர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டிருந்தனர்.

ஊர்வல ஆரம்பத்தில் நிதானமான அரசாங்க எதிர்ப்பு, தரப்படுத்தல் எதிர்ப்பு முழக்கங்களைக் கொண்டிருந்த போதிலும், ஊர்வலம் குறிப்பிட்ட தூரம் வந்தபின், அன்றைய கல்வியமைச்சரான பதியுதீன் மஹ்முடின் மீதும் முஸ்லிம் துவேஷ அடிப்படையிலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இது தமிழ்த் தேசியவாதத்தின் பிற்போக்கான நிலைப்பாட்டின் வழியிலேயேயாகும். இம் முழக்கங்கள் யாழ் முஸ்லிம் வட்டாரத்தின் ஊடாக ஊர்வலம் வந்த போது உச்சத்தை அடைந்ததுடன் சில மாணவர்கள் தாம் அணிந்திருந்த தொப்பிகளைக் கழற்றிப் புரட்டி எறிந்து அணிந்து பாவனை செய்தும் கொண்டனர். இத்தகைய இழி நடத்தையைக் கம்யூனிஸ்ட் மாணவர்கள் எதிர்த்தனர். முஸ்லீம் மாணவர்களும் கலந்து கொண்ட அவ்வூர்வலத்தில் அத்தகைய துவேஷ முழக்கங்கள் நிறுத்தப்பட வேண்டும் எனக் கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பினர் வற்புறுத்தினர். இதனால் மாணவர்கள் மத்தியில் முறுகல் நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசியவாதத்தின் அசிங்கத்தை அவ்வூர்வலத்திற் காண முடிந்தது.

அதன் பின் முற்றவெளியில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தரப்படுத்தலுக்கு எதிராக முன் கூட்டியே அச்சிடப்பட்ட கம்யூனிஸ்ட் மாணவர் அமைப்பின் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்ட போது அங்கு கைகலப்புகள் இடம்பெறலாயின. அன்றைய சம்பவம் தமிழ்த் தேசியவாதத்தின் படுபிற்போக்கான கூறுகளின் வழியேதான் சகல போராட்டங்களும் பயணிக்கப் போகிறதே தவிர முற்போக்கான கூறுகளுக்கு அங்கு இடம் இருக்கப் போவதில்லை என்பதையே எடுத்துக் காட்டியது. வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பது போன்று அன்று கிளப்பப்பட்ட முஸ்லீம் விரோதம் பிற்காலத்தில் எத்தகைய வளர்ச்சியைக் கண்டது என்பதைக் கடந்த முப்பது ஆண்டுகளில் எல்லோரும் காண முடிந்தது.

இத்தகைய மாணவர் பேரவையானது படிப்படியாக இளைஞர் பேரவையாக மாற்றம் பெற்றது. ஆனால் அதன் போக்கிற் புதிய கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்குமான எதுவும் தென்படவில்லை. தமிழரசுக் கட்சியினர் பேசிய அதே தொனியில் தான் இளைஞர் பேரவையினரும் பேசினர். இப் பேரவையில் அணிதிரண்ட இளைஞர்கள் மத்தியில் தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு எதிரான அதிருப்தியும் கண்டனமும் காணப்பட்டன. அவை தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டை ஒரு மிதவாதப் போக்கிலும் வெறுமனே பாராளுமன்றத்திற்குப் போகும் பாதையிலும் முன்னெடுக்கப்படுவதன் குற்றச் சாட்டை மட்டுமே கொண்டிருந்தன. அதற்கு அப்பால், வடக்கு கிழக்கின் தமிழ் மக்களிடையே நிலவிவந்த அடிப்படைப் பிரச்சினைகளான வர்க்க, சாதிய, பிரதேச, மத முரண்பாடுகளுக்கான தீர்வுகளை உள்ளடக்கியதாக முழுத் தமிழ் மக்களையும் அணிதிரட்டக் கூடிய முற்போக்கான வெகுஜனப் போராட்டப் பாதையிலான கொள்கைகளையோ நடைமுறைகளையோ அவற்றுக்கான சாயல்களையோ இத் தமிழ் இளைஞர் பேரவையினர் கொண்டிருக்கவில்லை.

எப்பொழுதும் இளைஞர்கள் என்போர் ஒரு வர்க்கமாக இருப்பதில்லை. அவர்கள் பல்வேறு வர்க்க பின்புலத்திலிருந்து வருபவர்களாகவே இருப்பர். அவர்களிடையே வளரும் சிந்தனைகளும் செயற்பாட்டு முயற்சிகளும் பெருமளவிற்குத் தாம் சார்ந்த வர்க்கத்தின் சார்பாகவும் அதன் நலன்களை மீறாத வகையிலுமே அமைந்து கொள்ளும். ஒரு சில இளைஞர்கள் தமது சூழலாலும் முன்நோக்கிய பரந்த சிந்தனையாலும் மாற்றுக் கருத்துக்களுக்கும் நடைமுறைகளுக்கும் வந்து கொள்வார்கள். தமிழ் இளைஞர் பேரவையில் ஒன்றிணைந்த இளைஞர்கள் தமிழ்த் தேசியவாதத்தின் பிற்போக்கான கூறுகளைத் தம்மகத்தே கொண்டிருந்தனர். அத்துடன் தமிழரசுக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை உள்ளுரப் பெற்றும் இருந்தனர். இவ் இளைஞர் பேரவையினரில் ஓரிருவர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகத்து இளைஞர்களாக இருந்து வந்தனர். அதே வேளை, பெரும்பாலானவர்கள் உயர்சாதி மத்தியதர, கீழ் மத்தியதரத் தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்தோராகவே இருந்தனர். வன்முறையை நாடுவதும் அதன் மூலம் பௌத்த சிங்கள மேலாண்மை அரசாங்கத்தை எதிர்ப்பதும் அவர்களது பிரதான நோக்கமாக இருந்ததே தவிரக், கருத்தியல் சிந்தனை நடைமுறைத் தளங்களில் தமிழ்த் தேசியவாதத்தின் குறுந்தேசியவாத நிலைப்போக்கே முனைப்புக்காட்டி நின்றது. சாதியத்தை அடிப்படையில் எதிர்த்து முறியடிக்க முடியாத தமிழ்த் தேசியம் வெறும் தமிழ் உணர்வால் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களை இணைக்க நின்றது. அதற்கச் சில கல்வி கற்ற அல்லது மேநிலையாக்கம் பெற்ற தாழ்த்தப்பட்டோர் ஆதரவு கொடுத்து பங்கு கொண்டனர். அப்படியானவர்களுக்குக் கூட தமிழ்த் தேசியவாத அரசியலில் வரையறுக்கப்பட்ட இடமே இருந்து வந்தது.

இவ்வாறான சூழலிலேயே, 1972ம் ஆண்டு புதிய அரசியலமைப்பு அன்றைய ஐக்கிய முன்னணி அரசால் கொண்டு வரப்பட்டது. பிரித்தானிய முடியாட்சியுடன் இலங்கையைத் தொடர்புபடுத்தி வைத்திருந்த சகலவற்றையும் அறுத்துக் கொண்டு சுதந்திரமான இலங்கையை அவ் அரசியலமைப்பு பிரகடனம் செய்து கொண்டது. அதன் அடிப்படையில் இலங்கையின் தேயிலை, இறப்பர் உற்பத்திக்கான பெருந்தோட்டங்களை அந்நிய வெள்ளைக்காரர்களிடம் இருந்து அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. தோட்டங்களைத் தேசியமயமாக்கும் நடவடிக்கைளையும் மேற்கொண்டது. இவ்வாறு குறிப்பிடத்தக்க முற்போக்கான செயற்பாடுகளை ஐக்கிய முன்னணி அரசாங்கம் பாராளுமன்ற இடதுசாரிகளின் ஆதரவுடன் முன்னெடுத்தது. அதே வேளை, தேசிய இனப் பிரச்சினையை நியாயமான வழிகளில் தீர்த்து வைப்பதற்கு அவ் அரசியலமைப்பில் எவ்வித ஏற்பாடும் உட்புகுத்தப் பட்டிருக்கவில்லை. மேலும் அவ் அரசியலமைப்பு பௌத்த மதத்திற்கு முதலிடம் அளித்ததுடன் சிறுபான்மையோர் பாதுகாப்பிற்கெனப் பெயரளவில் சோல்பெரி அரசியலமைப்பில் இருந்த 29வது சரத்தை விலக்கியது. அது இருக்கக் கூடியதாகவே 1948இல் பிரசாவுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறே 1956இல் தனிச்சிங்கள மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஏற்கெனவே கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் செயலாக்கப்பட்டன. அப்போதெல்லாம் இவ் 29வது சரத்தின் மூலம் எத்தகைய தடையையும் ஏற்படுத்த ஏன் முடியவில்லை என்பதற்கான விடை, மேற்படி சரத்து வெறும் பெயரளவிலான ஒன்று என்பதேயாகும்.

இப் புதிய, குடியரசு அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டதிலிருந்த சோகம் என்னவென்றால், அதனைக் கொண்டுவந்த அரசியலமைப்பு அமைச்சராக இருந்தவர் ட்ரொட்ஸ்கிச இடதுசாரியும் சமசமாஜக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான கொல்வின் ஆர். டி சில்வா என்பது தான். அவரே, தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துப் பாராளுமன்றத்திற் பேசும் போது, ஒரு மொழி இரண்டு நாடு இரண்டு மொழி ஒரு நாடு எனத் தனது சிம்மக் குரலில் கர்ச்சித்தவராவார். அவ்வாறே இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான டாக்டர் விக்கிரமசிங்ஹ, அன்றைய பருத்தித்துறை தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரான பொன். கந்தையா ஆகியோரும் தனிச் சிங்கள மசோதாவை எதிர்த்துக் கடுமையாக உரையாற்றி இருந்தனர். அன்று அம் மசோதாவை எதிர்த்து வாக்களித்த தமிழப்; பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமானதாகும். ஆனாற் பாராளுமன்றச் சந்தர்ப்பவாதமும் அமைச்சுப் பதவிகளின் தணியாத மோகமும் ட்ரொட்சியவாதிகளை ஒரு அந்தலையில் இருந்து மறு அந்தலைக்குப் பாய வைத்தது. அதுவே அவர்களது நிரந்தரச் சீரழிவுக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான கறையாகவும் அமைந்து கொண்டது.

இன்று வரை, தமிழ்த் தேசியவாதம் பேசும் அத்தனை கனவான்களும் தமது துரோகத்தனம், பிற்போக்கு நிலை என்பனவற்றை மறைக்கவும் பொத்தம் பொதுவாக இடதுசாரி விரோதத்தைக் கக்கவும் மேற்கூறிய இடதுசாரிகள் முன்னின்று நிறைவேற்றிய அரசியலமைப்பையே பிரதானப்படுத்திக் காட்டுவது அவர்களுக்கு வசதியாக அமைந்து கொண்டது.

இதன் வழியில், தமிழரசு-தமிழ்க் காங்கிரஸ் தலைமைகள் தமது பாராளுமன்றத் தேர்தல் தோல்விகளை முழு அளவிலான வெற்றிகளாக்க இச் சந்தர்ப்பத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு பயன்படுத்த ஆரம்பித்தன. அத்தகைய எதிர்ப்பு நடவடிக்கை போதாது என்றும் மிதவாதம் கொண்டது எனவும் கூறி தமிழ் இளைஞர் பேரவையினர் அடிக்கடி தமிழரசுத் தலைமையுடன் முரண்பட்டு வந்தனர். ஆனால், அமிர்தலிங்கம் போன்றோருடன் இளைஞர்கள் முரண்பட்ட போதிலும் இளைஞர்களைத் தமக்கு விசுவாசமான இளைஞர்கள் மூலம் கட்டுப்படுத்தி வைத்திருக்கவே தமிழரசுக்கட்சி முயன்றது. அதன் வழியில், அமிர்தலிங்கம் போன்றோர் இரண்டு வழிமுறைகளைப் பின்பற்றினர். ஒன்று, தமிழ் தேசியவாத நிலைப்பாட்டில் சகலரும் ஐக்கியப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் தமது ஒற்றுமையை அரசாங்கத்திற்கும் உலகிற்கும் காட்ட வேண்டும் என்பதாகும். மற்றது, வடக்கு கிழக்கில் தமக்கு எதிராகவுள்ள பாராளுமன்ற எதிராளிகளைத் துரோகிகளாக அடையாளப்படுத்தி அவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்பதாகும். அதற்கு தீவிரமாக நிற்கும் இளைஞர்களைப் பயன்படுத்தவும் தமிழரசுத் தலைமை தயக்கம் காட்டவில்லை. இத்தகைய குறுக்கு வழிப்பாதைக்கு திசைகாட்டியவர்களால் அதன் எதிர்கால விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை உணரவோ ஊகிக்க இயலவில்லை.

மறுபுறத்தில் தமிழ் மக்களை திருப்திப் படுத்தி தமது தலைமைத்துவ ஆதிக்கத்தை தொடர்ந்து கைகளில் வைத்திருப்பதற்கான அரசியல் காய் நகர்த்தல்களைச் செய்தனர். 1972இல் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து வல்வெட்டித்துறையில் ஒரு கூட்டத்தை நடாத்திய தமிழரசு--தமிழ்க்; காங்கிரஸ்--இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து தமிழர் கூட்டணி என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தனர். இக் கூட்டணியில் தமிழ் காங்கிரஸ் முழுமையான ஈடுபாட்டைக் காட்டவில்லை. ஆயினும் தமிழ் காங்கிரசில் நின்று 1970இல் தோல்வியடைந்த மு. சிவசிதம்பரம், காங்கேசன்துறை திருநாவுக்கரசு, வவுனியா த. சிவசிதம்பரம் ஆகியோர் தமிழரசுடன் கூட்டணி வைத்து வேலை செய்ய ஆரம்பித்தனர். ஜீ.ஜீ. பொன்னம்பலமும் அவரோடு இணைந்து நின்ற தனிப்பட்ட தமிழ் காங்கிரஸ்காரர்களும் இக் கூட்டணிக்குச் சம்பந்தமற்றவர்களாகவே இருந்து வந்தனர். இருப்பினும், தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளராக மு. சிவசிதம்பரம் இருந்தமையால், உருவாக்கப்பட்ட கூட்டணி ஒரு ஐக்கியத் தோற்றத்தைக் காட்டியது.

தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பத்தில் பெயரளவில் இக் கூட்டில் இணைந்திருப்பதாலும், விரைவாகவே அதிலிருந்து கழன்று கொண்டது. தமிழீழக் கோரிக்கையைத் தாம் ஆதரிக்கவில்லை எனத் தொண்டமானின் பகிரங்க அறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

இதனால் தமிழரசு-காங்கிரஸ் கட்சிகள் மீது விரக்தியடைந்த தமிழ் இளைஞர் ஓரளவுக்கு ஆறுதல் பெற்றாராயினும் தீவிர எண்ணம் கொண்ட இளைஞர்களின் அழுத்தம் அதிகரித்துக் கொண்டே வந்தது. அதனாற், கறுப்புக் கொடிப் போராட்டம், துக்கதினம் கடைப்பிடித்தல், உண்ணாவிரதம் இருத்தல் போன்ற தமிழரசுக் கட்சியின் வழமையான நடவடிக்கைகளே கூட்டணி அமைத்த பின்பும் தொடர்ந்து, 1972 மே 22ஆந் திகதி புதிய அரசியலமைப்பும் குடியரசுப் பிரகடனமும் இடம்பெற்ற போது, வடக்கு கிழக்கில் துக்கதினமும் கறுப்புக்கொடி பறக்கவிடுவதும் கூட்டணியால் முன்னெடுக்கப்பட்டது. அதே வேளை, தமிழ் மாணவர், தமிழ் இளைஞர் பேரவைகளின் ஊடாக வந்த இளைஞர்களிற் சிலர் வன்முறை நடவடிக்கைகளில் இறங்கினர். தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகளின் ஆரம்ப வடிவங்கள் ஆங்காங்கே இடம்பெற்றன.

இச் சூழலிலேயே 1972ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த மே 22ம் திகதியில் இருந்து நான்கு மாதங்களுக்குப் பின்பு காங்கேசன்துறைத் தொகுதிக்கான தனது பாராளுமன்றப் பதவியை எஸ்.ஜே.வி. செல்வநாயகம் துறந்து கொண்டார். நிரந்தரமானதாக அன்றிப், புதிய குடியரசு அரசியல் யாப்பிற்கான கண்டனமாகவும் எதிர்ப்பாகவும் இப் பதவி துறப்பு இடம்பெற்றது. ஆனால் அரசாங்கம் அதற்கான இடைத்தேர்தலை 1975ம் ஆண்டு முற்பகுதியிலேயே நடாத்தியது. வேண்டுமென்றே இவ் இடைத்தேர்தலை அரசாங்கம் இழுத்தடித்து வந்தது. இவ்வாறு பாராளுமன்றப் பதவி துறத்தலானது பெரும் அரசியல் நடவடிக்கையாகவும் தியாகமாகவும் காட்டப்பட்டு செல்வநாயகத்தைச் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்ட 'தந்தை", 'ஈழத்துக் காந்தி" போன்ற படிமங்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டன.

மேலும் கூட்டணியினருக்கு, குறிப்பாகத் தமிழரசுக் கட்சியினருக்குத், தமது தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டை ஊக்குவிப்பதற்கு அடுத்த ஒரு சந்தர்ப்பம் காத்திருந்தது. அதுவே நான்காவது உலகத் தமிழ் ஆராச்சி மாநாடாகும். இலங்கையில் நடைபெற இருந்த அம் மாநாட்டைக் கொழும்பிலா அல்லது யாழ்ப்பாணத்திலா நடாத்துவது என்பதில் ஆரம்பம் முதல் அரசாங்கக் காப்பாளர்களுக்கும் தமிழ்த் தேசியவாதத் தலைவர்களுக்குமிடையில் இழுபறியாகவும் வாக்குவாதமாகவும் இருந்து வந்தது. இறுதியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அவ் வேளை யாழ் மாநகர சபையின் முதல்வரான அல்பிரட் துரையப்பா ஏற்கனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்திருந்தார். யாழ்ப்பாணத் தொகுதியில் சுயேட்சை உறுப்பினராகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பின்பே அவர் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார். அதனால் அவர் தமிழரசுக் கட்சியினருக்குத் துரோகி ஆகினர். இந் நிலையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற தமிழராய்ச்சி மாநாட்டு இறுதி நாள் நிகழ்வு அம் மண்டப முன்றலில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது. யாழ் முற்றவெளிக்கு முன்பாக அமைந்திருந்த மேற்படி நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான மக்கள் விழாக் காணக்கூடி இருந்தனர். இதன் போதே, பொலீஸ் படையினர் இந் நிகழ்ச்சியை குழப்பியடிக்கும் நோக்குடன் உட்புகுந்து கலகத்தில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களை எதிர்த்து இளைஞர்கள் செருப்புக்களும் கற்களும் கொண்டு தாக்கினர். அதனால், ஆகாயம் நோக்கிப் பொலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது மக்கள் சிதறி ஓடியதுடன் சரிந்து விழுந்த மின்சாரக் கம்பிகளில் சிக்குண்டு ஒன்பது பொதுமக்கள் உயிர் துறந்தனர்.

தமிழராய்ச்சி மாநாட்டின் மேற்படி துயரச் சம்பவம் தமிழர் கூட்டணியினருக்குப் பெரும் அரசியல் வரப்பிரசாதமாக அமைந்து கொண்டது. தமிழர்களின் தலை நகரிலே தமிழர்கள் மீது சிங்கள இனவாதப் பொலிசார் நடத்திய தாக்குதல் என்பதாகவும் அதற்கு மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா துணையாக இருந்தார் அல்லது ஏவி விட்டார் என்பதாகவும் பிரசாரம் மிக வேகமாகவே தமிழ் மக்கள் மத்தியில் பரவியது. இதில், தமிழர் கூட்டணி தமிழ் இளைஞர் பேரவையினர் போன்றோர் முன்நின்றனர். இத் துயரச் சம்பவத்தை நியாய சிந்தை உள்ள எவரும் ஏற்றுக் கொள்ள இயலாது. மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழராட்சி மாநாட்டில் பொலிசார் நடந்து கொண்ட அத்துமீறலை வன்மையாகக் கண்டித்து உரிய நீதி விசாரணையைக் கோரி நின்றது. ஆனால் தமிழ்த் தேசியவாத அரசியல் சக்திகள் இனவாதமாகவே அதனைப் பிரசாரப் படுத்தினர். அதே வேளை தாம் பரப்பி வந்த தமிழீழக் கோரிக்கையை மக்கள் மத்தியில் நியாயப்படுத்திக் கொள்ளவும் இச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

தமிழர் கூட்டணியினரதும் தமிழ் இளைஞர் பேரவையினரதும் குறுந்தேசியவாதப் பரப்புரைகள் தமிழ் மக்கள் மத்தியில் விரிவுபெற்று வந்த சூழலில், தமிழீழம் என்ற பிரிவினவாத எண்ணக்கருவும் வளர்க்கப் பட்டது. தமிழனைத் தமிழன் ஆள்வது, ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை, உலகில் பலகோடி தமிழர்கள் வாழ்ந்தும் தமிழருக்கென ஒரு நாடு இல்லை, இனிமேலும் சிங்கள ஏகாதிபத்தியத்தின் கீழ் வாழ முடியாது என்பன போன்ற கருத்துக்கள் தீவிர இனவாதத்தின் ஊடாகத் தமிழ் மக்கள் மத்தியிற் பரப்பப்பட்டன.

இவ்வாறான கட்டத்திலேயே 1975ம் ஆண்டு இரண்டாவது மாதத்தில் காங்கேசன்துறைத் தொகுதிக்கான இடைத்தேர்தலிற் செல்வநாயகம் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் பாராளுமன்றக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வி. பொன்னம்பலம் போட்டியிட்டார். இத் தேர்தலில் மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சி அக்கறை கொள்ளவும் இல்லை. இடதுசாரி என்றளவிற் கூட வி. பொன்னம்பலத்தை ஆதரிக்கவும் இல்லை. பாராளுமன்றச் சந்தர்ப்பவாத கம்யூனிஸ்ட் கட்சியையோ அன்றி வி. பொன்னம்பலம் என்ற சந்தர்ப்பவாதியையோ நேர்மையான மாக்சிச லெனினிசவாதிகள் எவரும் ஆதரிக்கவில்லை. அதே வேளை, செல்வநாயகத்தை ஆதரித்தோர் தமிழீழம் பற்றிய வேகமான பரப்புரைகளைச் செய்து கொண்டனர். இதன் போதே செல்வநாயகம் தமிழீழம் பற்றி மனவிருப்பமின்றி ஒரு பிரசார மேடையில் அரைகுறைச் சத்தத்தில் பேசினார் என்றும் அதனை அமிர்தலிங்கம் வழமையைவிட உரத்த தொனியில் தந்தை சொல்கிறார் எனப் பிரித்துப் பேசினார் என்றும் கூறப்படுவதுண்டு. எவ்வாறாயினும் செல்வநாயகத்தின் வாயால் அப்போதும் அதன் பின்பும் தமிழீழத்தைச் சொல்ல வைத்தவர் தளபதி அமிர்தலிங்கம் என்றே கூட்டணி வட்டாரங்களிற் பேசப்பட்டது.

அத் தேர்தலிற் செல்வநாயகம் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றார். அது தமிழீழத்திற்கான முதலாவது அங்கீகாரம் எனத் தமிழர் கூட்டணி மகிழ்ச்சி கொண்டது. வி. பொன்னம்பலம் சுமார் பத்தாயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். முன்னையது தமிழீழ ஆதரவு வாக்குகள் என்றால் பின்னையது தமிழீழ எதிர்ப்பு வாக்குகள் என்றே கொள்ள வேண்டியதாகும். இதில் வேடிக்கை யாதெனில், இதே வி.பி., காலம் அதிகஞ் செல்லுமுன்பாகவே, 'செந்தமிழர் இயக்கத்தைத்" தோற்றுவித்துக் கூட்டணியுடன் இணைந்து கொண்டார். அதை விட மோசமான ஒரு விடயத்தைக் கூட்டணி நடாத்திய மேதின மேடையில் பேசும் போது வி.பி. கூறியும் கொண்டார். அதாவது காங்கேசன்துறைத் தொகுதி இடைத் தேர்தலில் மனச்சாட்சியின்படி தந்தை செல்வாவிற்கே தனது வாக்கை அளித்தேன் என்றார். அதன் மூலம் தனக்கு வாக்களித்த பத்தாயிரம் வாக்காளர்களை மனச்சாட்சியற்ற முட்டாள்கள் என்பதாக ஆக்கிக் கொண்டார். அதுவே வி.பி. என்ற பிரபல்யம் பெற்ற "கம்யூனிஸ்ட் மனிதரின்" இறுதியான அரசியற் சாவாகவும் ஆகியது.

இடைத் தேர்தல் வெற்றி தமிழர் கூட்டணிக்கு தமிழ்த் தேசியவாத அரங்கில் செல்வாக்கு விரிவடைய வழிவகுத்த அதே வேளை இளைஞர் பேரவையைச் சேர்ந்த தீவிரவாத இளைஞர்களின் வன்முறை வரைமுறையற்ற விதத்தில் வளர ஆரம்பித்தது. உயர் பொலீஸ் அதிகாரி ஒருவரையும் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பாவையும் கொல்வதற்கு பல தடவைகள் இளைஞர்கள் முயன்ற போதிலும் அவை வெற்றியளிக்கவில்லை. இறுதியாக வட்டுக்கோட்டைத் தொகுதியில் அமிர்தலிங்கத்தின் இல்லத்திற்கு அண்மையாக அமைந்திருந்த பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடியில் வைத்து, வழிபாட்டிற்கு வந்த இடத்தில் அல்பிரட் துரையப்பா 1975ஆம் ஆண்டு யூலை 27ஆந் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையைச் செய்வதில் முன்நின்று நிறைவேற்றியவர் விடுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பது யாவரும் அறிந்த ஒன்றேயாகும். அதற்கு முன்பாக நல்லூர் கிராமசபைத் தலைவர் குமாரகுலசிங்கம் துரோகி எனக் கூறப்பட்டு இளைஞர் பேரவையைச் சேர்ந்தோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இரும்பு மனிதரெனப்பட்ட ஈ.எம்.வி. நாகநாதனை 70ஆம் ஆண்டுத் தேர்தலில் நல்லூர்த் தொகுதியில் தோற்கடித்த சி. அருளம்பலத்தின் பிரதான ஆதரவாளராக இருந்தார் என்பதே அதன் காரணமாகும்.

யாழ் மாநகர முதல்வர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றைய தினம் மாக்சிச லெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சியின் வடமராட்சிக் குழு ஒரு கருத்தரங்கை வல்வெட்டித்துறை சந்தியில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தில் ஒழுங்கு செய்திருந்தது. அதற்கு வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தலைமை தாங்கவும் அதில் கட்சியின் பொதுச் செயலாளர் நா. சண்முகதாசன் உரையாற்றுவதாகவும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலையில் துரையப்பா கொலை செய்யப்பட்ட செய்தி குடாநாட்டில் பரபரப்பாகிக் கொண்ட சூழலிலும் தீர்மானிக்கப்பட்ட மேற்படி கருத்தரங்கு அன்று மாலை குறித்த இடத்தில் நடைபெற்றது. பெருந்தொகையான மக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர். தோழர் சண், தமிழர் பிரச்சினையின் வளர்ச்சி பற்றியும் வர்க்க நிலைப்பாட்டின் ஊடான போராட்டம் பற்றியும் விரிவாகப் பேசினார். ஒரு கட்டத்தில் அன்று நடந்த துரையப்பா கொலையைச் சுட்டிக் காட்டி அது தனிநபர் பயங்கரவாதம் என்றும் அதன் மூலம் விடுதலை பெற முடியாது என்றும் அழுத்தந் திருத்தமாக எடுத்துரைத்தார். உதாரணத்திற்குத், தோழர் லெனின் மூத்த சகோதரர் தனிநபர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு ஜார் மன்னனைக் கொல்ல முற்பட்டு தோல்வி கண்டதுடன் தூக்கிற் தொங்க வேண்டியேற்பட்ட நிகழ்வையும் சுட்டிக் காட்டினார். அப் பேச்சை இளைஞர்கள் அன்று வல்வெட்டித்துறையில் கேட்டார்களே தவிர அதில் உள்ளடங்கியிருந்த அரசியல் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்றே கொள்ளல் வேண்டும்.

மேலும் தனித் தமிழீழம் என்ற எண்ணக்கருவில் அடங்கியுள்ள பிற்போக்கான அம்சங்களையும் அதன் எதிர்கால வளர்ச்சியின் அபாயத்தையும் அதே நேரம் உரிய அரசியல் தந்திரோபாய போராட்ட வழிமுறையையும் மாக்சிச லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டி இருந்தது. அத்துடன் பேரினவாத ஒடுக்குமுறையின் வளர்ச்சிப் போக்கானது வடக்கு-கிழக்கு மக்களை நசுக்கி வருவதையும் எடுத்துக் காட்டியது. எதிரி யார், நண்பன் யார் என்ற தீர்மானிக்கப்பட்டு இனவாதமற்ற வர்க்கப் போராட்டப் பாதையில் வெகுஜன அடிப்படையில் மக்கள் அணிதிரண்டு போராடுவதைக் கட்சி தனது தலைமை வழிகாட்டலில் இடம்பெற்ற போராட்ட அனுபவத்தின் ஊடாக எடுத்துக் காட்டியது.

அதன் அடிப்படையில், தமிழீழப் பிரகடனம் வட்டுக்கோட்டையில் செய்யப்படுவதற்கு முன்பாகவே தமிழீழம் சாத்தியம் - சாத்தியம் இல்லை என்ற மாறு;றுக் கருத்துக்களின் பரப்புரை கூட்டணியினதும் மா.லெ. கம்யூனிஸ்ட்; கட்சியினதும் சார்பாகப் பல மேடைகளிற் பேசப்பட்டது. அது தொடர்பான பகிரங்க மேடை விவாதங்கள் இரண்டு 1975ஆம் ஆண்டு முற்பகுதியிலும் நடுப்பகுதியிலும் இடம்பெற்றன. ஒன்று ஆனைக்கோட்டை உயரப்புலம் பாரதி சனசமூக நிலையத்தினர் ஒழுங்கு செய்த விவாத மேடையில், தமிழீழம் சாத்தியம் என்றும் சாத்தியம் இல்லை என்றும் விவாதிக்கப்பட்டது. சாத்தியம் என்பதை வலியுறுத்தி கூட்டணி சார்பில் ம.க. ஈழவேந்தன் தலைமையில் ஒரு குழுவும் சாத்தியம் இல்லை என்பதை வற்புறுத்தி மா.லெ. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.கா. செந்திவேல் தலைமையிலான குழுவும் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். பெருந்தொகையான மக்களும் இளைஞர்களுமு; இவ்விதத்தில் பங்கு கொண்டனர். அவ் விவாதத்திற் சாத்தியமில்லை என்ற கருத்தே மேலோங்கிக் கொண்டது. அடுத்த விவாதம் அப்போதைய உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்திற்கும் தோழர் நா. சண்முகதாசனுக்கும் இடையில் இடம்பெற்றது. இவ் விவாதத்திற்கு முன்னாள் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அதிபர் ஒறேற்றர் சி. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

சுன்னாகம் சந்தை மைதானத்தில் நடைபெற்ற இவ் விவாதத்திலும் பெருந் தொகையான மக்கள் கலந்து கொண்டனர். தோழர் சண் முன்வைத்த சாத்தியமின்மைக்கான தர்க்க நியாயங்கள் பெரும் பகுதி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இவ்விரு விவாதங்களிலும் தமிழீழம் என்ற எண்ணக் கருவில் உள்ளடக்கியிருந்த பிற்போக்கு அம்சங்கள், அதன் மூலம் ஏகப் பெரும்பான்மையான மக்களுக்கு விடுதலை கிடைக்க முடியாமை, தமிழீழம் அடிப்படையில் மேட்டுக்குடி உயர் வர்க்க உயர் சாதிய ஆண்ட பரம்பரை சக்திகளுக்கே சேவை செய்யக் கூடியமை என்பன எடுத்து விளக்கப்பட்டிருந்தன. அத்துடன் இலங்கையின் வரலாற்று ரீதியான வளர்ச்சியும் சமகால அரசியல் யதார்த்தச் சூழலும் அந்நிய ஏகாதிபத்தியச் சக்திகளின் தலையீட்டு முயற்சிகளும் தமிழீழத்திற்கு சாதகமற்றதாகவே விளங்கும் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. அதன் ஒட்டுமொத்தமான சாத்தியமின்மை பற்றியும் எதிர்கால அபாயம் பற்றியும் தூரநோக்கில் எடுத்துக் கூறப்பட்டது. பழம் பெருமையும் உணர்ச்சி வேகமும் வீரமும் குறுந் தேசியவாதமாகப் பேசப்பட்ட சூழலில் அவற்றில் எதையுமே காதில் வாங்கிக் கொள்ள இயலவில்லை. இளைஞர்கள் தீவிரவாத நிலைப்பாட்டிலும் கூட்டணித் தலைமை பாராளுமன்றப் பாதையிலும் தமிமீழத்தை வென்றெடுக்க முன்நின்றனர். அதனால், 1976ஆம் ஆண்டு மே மாதத்தில் வட்டுக்கோட்டையின் பண்ணாகத்தில் தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்டது. அதன் அம்சங்கள் பற்றி அடுத்து வரும் தொடரில் பார்ப்போம்.

- வளரும் -


வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை - பகுதி ஒன்றை இங்கே வாசிக்கலாம்.

(நன்றி : புதிய பூமி)

Wednesday, October 28, 2009

தமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு


(தமிழரது நிலையை யூதர்களது நிலையுடன் ஒப்பிட்டு அரசியல் முடிவுகளை எடுப்பதன் ஆபத்தை ஆராயும் கட்டுரையின் முதலாவது பகுதி. புதிய பூமி பத்திரிகையில் வந்த கட்டுரை நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது.)

1. வரலாற்று உடன்பாடின்மை

இலங்கைத் தமிழரின் நிலையை இஸ்ரேலியருடன் ஒப்பிடுகிற ஒரு வழக்கம் 1960களில், 1961இல் சத்தியாக்கிரகம் தோல்வியில் முடிந்த பிறகு, தீவிரமடைந்து சிலகாலம் ஓய்வு பெற்று இருந்தது.

தமிழர் எல்லா நாடுகளிலும் உளர், தமிழருக்கு ஒரு நாடு இல்லை என்பது முன்பு யூதச் சமூகம் பற்றிய ஒரு கூற்றுக்கு ஒப்பானது. எனினும் அது பொருந்தாத உவமை. பெருவாரியான தமிழர் தமது சொந்த மண்ணிலேயே தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழரில் ஒரு பகுதியினர் கொலனி ஆட்சிக் காலத்திற் தமிழகத்திலிருந்த இடம் பெயர்க்கப்பட்டு இலங்கை, மலாயா, ஃபிஜி, மடகஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகட்கும் பிற இந்தியத் துணைக் கண்டச் சமூகத்தினருடன் சேர்ந்து மேற்கிந்தியத் தீவுகட்கும் பிற பிரித்தானியக் கொலனிகட்கும் அனுப்பப் பட்டனர். அந் நாடுகளிற் சிலவற்றில் அவர்கள் தம் இன, மொழி அடையாளங்களுடன் வாழுகின்றனர். சில நாடுகளில் இன அடையாளம் பேணுகின்றனர். பிறவற்றிற் தம்மைப் பிற சமூகங்களுடன் சங்கமாக்கி உள்ளனர். எனினும் தமிழருக்குரிய பிரதான நிலப்பரப்புத் தமிழகமே. தமிழினம் என்பது இன அடையாளமன்றி மொழி அடையாளமாகவே பெரிதும் அறியப் படுகிறது. இன்றைய தமிழரிற் கணிசமானோர் பிற இந்தியச் சமூகங்களிலிருந்து வந்தவர்களின் பரம்பரையினர். அவ்வாறே தமிழரும் பிற சமூகங்களுடன் ஒன்றியுள்ளனர்.

யூதர்கள் இன அடையாளத்தை வலியுறுத்துவது போக, யூத மதமும் அந்த அடையாளத்துக்கு நெருக்கமாக உள்ளது. மிக அரிதாகவே எவரும் யூத மதத்தைத் தழுவ இயலும். யூத மதம் பல பிரிவுகளைக் கொண்டது. எப் பிரிவிலும் இல்லாத யூதர்களும் உள்ளனர். பெரும்பாலான யூதர்கள் தமது மண்ணை விட்டு பதினைந்து நூற்றாண்டுகட்கு முன்னரே சிதறிச் சென்றுவிட்டனர். மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் அவர்கள் பிற சமூகத்தினருடன் பகைமை இல்லாது வாழ்ந்தனர் எனலாம். ஐரோப்பாவில் முதலாளியத்தின் எழுச்சியுடன் யூத சமூகத்தினின்று வணிகம், கடன் வழங்கல் என்பனவற்றின் வழியாகச் செல்வந்தர்கள் தோன்றினர். அதைவிட, வழமையான நிலவுடைமைச் சமூகத்தின் ஒரு பகுதியாக ஏற்கப்படாத யூதர்கள் தமக்கான சேரிகளில் வாழ்ந்தனர். அவ் வழக்கம் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் இறுக்கமடைந்தது. கலைகளிலும் பொழுதுபோக்கு, கணித, அறிவியற் துறைகளிலும் யூதரிடையே ஈடுபாடுடையோர் தோன்றுவதற்கு அவர்கள் நிலவுடைமைச் சமுதாயத்திற்குப் புறம்பானவர்களாக இருந்தமை ஒரு காரணியாயிற்று.

அப்போது உலகளாவிய யூத உணர்வு என்று ஒன்று இருந்ததாகக் கூற இயலாது. தீவிர மதப் பற்றாளரிடையே தமது சொந்த நாட்டுக்கு (பல நூறு ஆண்டுகள் முன்பு விட்டுச் சென்ற இஸ்ரேலுக்கு) மீளுவோம் என்ற மதவழியான நம்பிக்கை இருந்தது. முதலாம் உலகப் போரை ஒட்டிய காலத்திலேயே யூதர்கட்கான தாயகம் என்ற கருத்து பிரித்தானிய கொலனிய ஆட்சியாளர்களது துணையுடன் உருவாக்கப் பட்டது. அதற்கு நியாயங்கள் இருந்தன. அக் காலத்தில் யூதர்கள் பல ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ச்சியான கொடுமையை அனுபவித்தனர். ரஷ்யப் பேரரசு உட்பட்ட பல நாடுகளிலும் அவர்கட்கெதிரான இன ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. எனினும் ஜேர்மன் ஃபாசிசவாதிகளின் கீழ் இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்து யூதர்கள் அனுபவித்த கொடுமைகளே யூதர்கட்கு ஒரு தாயகம் தேவை என்ற கருத்துக்கு வலிமை சேர்ந்தன. அப்போது யூதர்களிடம் வங்கி மூலதன வலிமை இருந்தது. அந்தப் பொருள் வலிமையும் அவர்களது செல்வாக்கிற்கு உதவியது.

எனினும் யூதர்கட்கான தாயகத்தை அவர்கள் எப்போதோ விட்டுச் சென்ற மண்ணிலே நிறுவதற்காக, ஸியோனிஸவாதிகள் எனப்படும் யூத இனவாதிகள் பயங்கரவாத அமைப்புக்களைக் கொண்டு அராபியர்களை வன்முறை மூலம் விரட்டத் தொடங்கினர். முடிவில், ஐ.நா சபையின் ஆசிகளுடன் 1948இல் இஸ்ரேல் நிறுவப்பட்டது. அதன் பின்பும் அராபியரை விரட்டுவதும் பலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் மேற்கொள்வதும் தொடர்ந்தது.

இஸ்ரேல் உருவானதிலிருந்து இஸ்ரேலிய அரசு இரண்டு முக்கியமான காரியங்களைச் செய்தது. ஒன்று யூத இனவெறியை வளர்த்துப் பலஸ்தீன மண்ணின் வளமான பகுதிகள் அனைத்தையும் அராபியரிடமிருந்து பறிக்கிற ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட வன்முறையுமாகும். மற்றது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் காவலரணாக இஸ்ரேல் கடந்த அரை நூற்றாண்டுகளாக இயங்கி வந்துள்ளது.

இஸ்ரேல் கடந்த அறுபதாண்டுகளாகப் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைத்து வந்துள்ள கொடுமைகள் விரிவாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. பலஸ்தீன மக்களுடைய எழுச்சியின் விளைவாக அவர்களது விடுதலை இயக்கமான பலஸ்தீன விடுதலை இயக்கம் 1974இல் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டது. எனினும் பலஸ்தீன மக்களால் இன்னமும் பறிக்கப்பட்ட தமது மண்ணுக்கு மீற இயலாதுள்ளது. அதற்கான காரணம் இஸ்ரேலின் அரச இயந்திரத்தின் வலிமையும் பலஸ்தீன மக்களின் ஒற்றுமையின்மையும் அரபு நாடுகட்கு இடையிலான பகைமைகளும் என்று சிலர் விளக்க முற்படுகின்றனர். ஆனால் அத்தனைக்கும் ஆதாரமாக இருப்பது அமெரிக்கா என்கிற பெரு வல்லரசு இஸ்ரேலுக்கு வழங்கிவந்துள்ள நிபந்தனையற்ற ஆதரவேயாகும். அமெரிக்காவின் பொருளாதார, இராணுவ உதவியின்றி இஸ்ரேலால் நிலைக்க முடியாது. சர்வதேச அரங்கில் இஸ்ரேலை உலக நாடுகள் புறக்கணிக்காமலும் தண்டிக்காமலும் இருப்பதற்கும் அமெரிக்காவின் ஆதரவு முக்கியமானது.

இந்த உண்மைகளை மனதிற் கொள்ளும் எவருக்கும் இஸ்ரேல் என்கிற நாட்டுடனும் யூத இனத்துடனும் இலங்கைத் தமிழரின் நிலையைப் பொருத்திப் பார்ப்பது எத்துணை அபத்தமானது என்று விளங்கும்.


(நன்றி: புதிய பூமி)

Tuesday, October 27, 2009

"ஆப்பிரிக்க காபிர்கள்" - இலங்கையின் இன்னொரு சிறுபான்மையினம்

இலங்கையில் வாழும் ஆப்பிரிக்க வம்சாவழியினரான "காபிர்கள்", அவர்களது பாரம்பரிய கலாச்சாரம் பற்றிய ஆவணப்படம்.

kaffir culture from Kannan Arunasalam on Vimeo.



இது தொடர்பான முன்னைய பதிவொன்று:
இலங்கைத் தீவின் ஆப்பிரிக்க வம்சாவளி மக்கள்

Monday, October 26, 2009

அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் படும் பாடு

அமெரிக்காவில், சான்பிரான்சிஸ்கோவில் இஸ்ரேலிய பிரதமர் ஒல்மேர்ட் உரையாற்றிய பொதுக்கூட்டம் ஒன்றில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. காசாவில் இனவழிப்புப் போரை நடத்திய போர்க்குற்றவாளி ஒல்மேர்ட்டிற்கு பேச்சுச் சுதந்திரம் அளித்தமைக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். கூட்டத்தில் ஒல்மேர்ட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்த பலர் பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். அன்று மொத்தம் 22 எதிர்க்கருத்தாளர்கள் கைது செய்யப்பட்டனர். இனவழிப்பு குற்றவாளி ஒல்மேர்ட் மாத்திரம் இன்று வரை கைது செய்யப்படவில்லை. அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் மதிக்கப்படுவதாகவும், அமெரிக்க ஜனநாயகம் போர்க்குற்றவாளிகளை அனுமதிப்பதில்லை என்றும் பெருமிதம் கொள்பவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்.


Sunday, October 25, 2009

கஞ்சித் தொட்டிகளில் காத்திருக்கும் நியூ யோர்க் ஏழைகள் (வீடியோ)

நியூ யோர்க், செல்வம் கொழிக்கும் அமெரிக்காவின் ஒப்பற்ற தொழிற்துறை நகரம். அங்கே தற்போது அன்றாட சாப்பாடிற்கே அல்லலுறும் ஏழை மக்கள் பெருகி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு உணவிடும் கஞ்சித் தொட்டிகளும் பெருகி வருகின்றன. முன்னர் எப்போதும் இல்லாதவாறு, தர்ம ஸ்தாபனங்கள் நடத்தும் கஞ்சித் தொட்டிகளின் முன்னால் காத்திருக்குப்பவர்களின் வரிசை முடிவின்றி தொடர்கின்றது. ஒதுங்க ஒரு கூரையற்றவர்கள் தான் ஏழைகள் என்ற நியதி மாறி வருகின்றது. வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் பலரிடம் சாப்பாட்டிற்கு தேவையான பணம் கையிருப்பில் இல்லை. அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு உயர்ந்து கொண்டே வருகையில், வழங்கப்படும் சமூகநலன் கொடுப்பனவுகள் குறைந்து கொண்டே செல்கின்றது. வாடகை, மின்சாரம், நீர் போன்ற செலவுகளுக்கு செலவிட்ட பின்னர் உணவிற்கு போதாத சொற்ப தொகை.

சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்! - மறைக்கப்பட்ட செய்தி ஒளிப்பதிவுடன்

2008 ம் ஆண்டு, ஈராக்கிய தளத்தில் இருந்து சென்ற இரு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் சிரியாவினுள் புகுந்து தாக்குதல நடத்தி விட்டு திரும்பியுள்ளன. ஈராக் எல்லையில் இருந்து சிறிது தொலைவில் உள்ள "அல் சுக்காரியா" என்ற கிராமம், எல்லைகடந்த அமெரிக்க பயங்கரவாத தாக்குதலுக்கு இரையானது. இந்த அதிரடி தாக்குதலில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒன்பது பொது மக்கள் கொல்லப்பட்டனர். சர்வதேச சட்டங்களை மீறிய, சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாத அமெரிக்க அத்துமீறலின் நோக்கம் என்ன? ஒபாமா நிர்வாகம், சிரியா மீதான இராணுவ நடவடிக்கையைக்கு தயாராகின்றதா?



தாக்குதலை படம்பிடித்த சிரிய தொலைக்காட்சி ஒளிப்பதிவு:

Saturday, October 24, 2009

ஆதிவாசிகள், ஏழைகள் மீதான போரை நிறுத்துக! - இந்திய அரசுக்கு கடிதம்

சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்!
இந்தியப் பிரதமருக்கு அனுப்பப் பட்ட வெளிப்படையான கடிதம்

ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மகாராட்டிரம், ஒரிசா மற்றும் மேற்கு வங்களாத்தில் முன்னெப்போதும் காண இயலாத வகையில் ராணுவ படையும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டு, பெரும் ராணுவ தாக்குதல் நடத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை அறிந்து நாங்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளோம்.

மாவோயிஸ கலகக்காரர்களின் தாக்கத்திருந்து இப்பகுதியை விடுதலை செய்வது என்பதுதான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முன்தாக்குதலுக்கான முக்கிய காரணமாகும். இத்தகைய ராணுவ நடவடிக்கை அங்கு வாழும் இலட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கையையும், வாழ்நிலை தேவைகளையும் பாதிப்புக்குள்ளாக்கி சாதாரண குடிமக்களின் பெருமளவிலான இடம்பெயர்தல், அவலநிலை, மனிதஉரிமை மீறல்களுக்கு வழிவகை செய்யும்.
உள்நாட்டு கலகத்தை ஒடுக்குகிற போர்வையில் மிகவும் ஏழ்மையான இந்திய குடிமக்களை துரத்தி சிக்கல் ஆழ்த்துவது என்பது ஒரு எதிர்மறை விளைவுகளையும், கேடு பயக்கத்தக்க விளைவுகளையும் ஏற்படுத்துவதாகவே அமையும். கலகக்காரர்களுக்கு எதிராக அரசாங்க முகவர்களால் நிதியுதவி அளிக்கப்பட்டு அணிதிரட்டப்பட்ட கூட்டுப்படைகளின் ஆதரவோடு துணை ராணுவ படையின் முன்னடத்திச் செல்லும் நடவடிக்கைகளினால் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்து ஏற்கனவே அப்பகுதியில் உள்நாட்டு போர் என்ற நிலைக்கு சமானமான சூழல் சட்டீஸ்கரில் சில பகுதிகளிலும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் உருவாக்கியுள்ளது.

உழலும், ஏழ்மை மிகவும் மோசமான வாழ்நிலை போன்றவைதான் இந்தியாவின் ஆதிவாசி மக்கள் தொகையினர் எதிர்கொள்ளும் நிலைமையாகும். 1990களுக்குப் பின்னர் இந்திய அரசின் கொள்கை திட்டங்களில் ஏற்பட்ட புதிய தாராளவாத திருப்பங்களின் பின்னர், அதிகரித்து வரும் அரசு வன்முறையையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வந்தது, காடுகள், நிலங்கள், நதிகள், பொது மேய்ச்சல் நிலங்கள், கிராம ஏரிகள் மற்றும் பிற பொது மூலாதாரங்கள் போன்ற ஏழைகளின் பயன்பாட்டிற்கு எஞ்சியிருந்த பலவும். சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் சுரங்க வேலை, தொழிற்சாலை வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற‘ வளர்ச்சி திட்டம் என்ற போர்வையில் இந்திய அரசின் தீவிர தாக்குதலுக்கு உட்பட்டது.

இந்திய அரசாங்கம் ராணுவ தாக்குதல்நடத்த திட்டமிட்டுள்ள பகுதியின் பூகோள வடிவியல் கனிம வளங்களும், காட்டுச்செல்வங்களும், நீரும் நிறைந்த பகுதியாக இருப்பது மட்டுமின்றி, பல பெரும்நிறுவனங்களின் பெரிய அளவு சுரண்டலுக்கு இலக்காகவும் மாறிவிட்டுள்ளது.

வேறு வழியின்றி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த மரபின மக்கள் இடம்பெயர்தலுக்கும் தனது பகுதிகள் அபகரிக்கப்படுவதற்கும் எதிராக நடத்தும் செயல்பாடுகளால் அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற பெரு நிறுவனங்கள் இப்பகுதியில் மேலும் நுழைய இயலாமல் தடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் ராணுவ தாக்குதல் என்பதே இம்மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒடுக்கி பெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு வசதி செய்து கொடுக்கவும், அதன்மூலம் அப்பகுதியின் கனிம வளங்களையும் மக்களையும் தங்குதடையின்றி சுரண்டவும் வழிவகை செய்யவே என நாங்கள் அஞ்சுகிறோம்.

விரிந்துவரும் ஏற்றத்தாழ்வும். சமூக அளவிலான உரிமை மறுப்பும், ஏழை மக்களும் விளிம்பு நிலையில் உள்ளவர்களும் தமது சொத்துக்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிராக நடத்தும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு எதிரான அரசு வன்முறையும் போன்றவைகளே சமூக எரிச்சலும் கொந்தளிப்பும் உருவாக காரணமாகி ஏழை மக்களின் அரசியல் வன்முறை என்ற
வடிவத்தை பெறுகிறது.

பிரச்சினையின் மூல காரணத்தை சரியாக அணுகாமல் இந்திய அரசு ராணுவ தாக்குதல் மூலம் அதனை எதிர்கொள்ள முயல்கின்றது, அதாவது ”ஏழையைக் கொல்வோம், ஏழ்மையை அல்ல" என்பதுதான் இந்திய அரசாங்கம் மறைமுகமாக முன்வைக்கும் கோஷமாகத் தெரிகிறது.

இந்திய அரசாங்கம் தனது ஏழை குடிமக்களின் துயரங்களுக்கான காரணத்தை அணுக முயற்சிக்காமல் ராணுவ ரீதியாக அவர்களை ஒடுக்க முயன்றால். அது இந்திய ஜனநாயகத்திற்கு பலத்த அடியை ஏற்படுத்தும். இத்தகைய முயற்சியில்
குறுகிய கால வெற்றியும்கூட சந்தேகத்திற்குரியதாயினும் ,சாதாரண மக்களின் துயரங்கள் மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமேதுமில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் உள்நாட்டு எதிர்ப்பாளர்கள் மீது நடத்தப்படும் பல அனுபவங்களிருந்து இதனை காணமுடியும்.

இந்திய அரசாங்கம் ராணுவபடைகளை உடனே வாபஸ் வாங்கி, ஏழை மக்களின் துயரங்களை அதிகரிக்கச் செய்யும் உள்நாட்டு யுத்தத்தை தூண்டி விடக்கூடிய, அதன்மூலம்பெரும் நிறுவனங்கள் மூலவளங்களை சுரண்டுவதற்கு வகைசெய்யக்கூடியதிறன்படைத்த ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதைஉடனே கைவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அனைத்துஜனநாயக உணர்வு கொண்ட மக்களையும் இந்த கோரிக்கையில் அணிதிரளுமாறு கோருகிறோம்.

இவண்.
அருந்ததிராய், அமித்பாதுரி, சந்திப்பாண்டே, கான் கொன்சால்வஸ், திபாங்கர் பட்டாச்சாரியா, சுமந்தா பானர்ஜி, மஹ்மூது மண்டானி, மீரா நாயர், ஆபாசுர், கியானேந்திரா பாண்டே, நோம் சோம்ஸ்கி, டேவிட் ஹார்வி, மைக்கேல் லெபோவிட்ஸ், பெல்லாமி ஃபாஸ்டர், ஜேம்ஸ் சி ஸ்காட் மற்றும் பிறர்.

(நன்றி: எக்கனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்கு)

குடியுரிமை பாதுகாப்பு நடுவம்.
99432 16762, 99433 11889, 94434 39869


Statement against Government of India’s planned military offensive in adivasi-populated regions: National and international signatories

கே.பி. கைது செய்யப்பட்டது எப்படி? - அவுஸ்திரேலிய டி.வி.

விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய தலைவர், கே.பி. என அழைக்கப்படும் குமாரன் பத்மநாதன் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியை ஆராயும் அவுஸ்திரேலியாவின் SBS தொலைக்காட்சி நிகழ்ச்சி.


Friday, October 23, 2009

அலிபாபாவும் ஹாலிவூட் பரப்புரையாளர்களும்

அமெரிக்க ஹாலிவூட் திரைப்படங்களில் அரபுக்களை (அல்லது முஸ்லிம்களை) வில்லன்களாக சித்தரிக்கும் தப்பெண்ணம் சினிமாத் துறையின் ஆரம்பகாலங்களில் இருந்து நிலவி வருகின்றது. திரைப்படங்கள் மூலமாக செய்யப்படம் அரசியல் பிரச்சாரம், அமெரிக்க அரசின் வேலையை இலகுவாக்குகின்றது. நாசி பரப்புரையாளர் கோயபல்ஸ் யூதர்களைப் பற்றி சித்தரித்தமைக்கு சற்றும் குறைந்தனவல்ல ஹாலிவூட் திரைப்படங்களின் பிரச்சாரம். அரபுக்கள் அனைவரும் ஒரே தன்மை உடையவர்களாக பொதுமைப்படுத்துவதும், "எமது எண்ணை", "எமது பணம்", "எமது பெண்கள்" அவர்களால் அபகரிக்கப்படுவதாக காட்டுவதும் இந்த (இனவாத) பிரச்சார சினிமாவின் நோக்கம்.

Jack Shaheen என்ற ஆவணப்படத் தயாரிப்பாளர் அரபுக்களுக்கு எதிராக ஹாலிவூட் பயன்படுத்தும் பிரச்சார உத்திகளை அலசுகிறார். Jack Shaheen ஒரு லெபனான்-அமெரிக்கர். இலினோய் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு ஊடகங்கள் பற்றிய விரிவுரையாற்றுபவர்.


Thursday, October 22, 2009

ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்! - திரையிடத் தடை

ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க இராணுவத்தை வில்லன்களாக சித்தரிக்கும் துருக்கி சினிமா படம் ஒன்று அமெரிக்காவில் திரையிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. ஈராக் போர் குறித்து வந்த செய்திகளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் படம் முழுவுதும், அமெரிக்கர்களை கெட்டவர்களாக காண்பிப்பதால், "இது ஒரு அமெரிக்க விரோத திரைப்படம்" என்று காரணம் கூறப்பட்டது. அமெரிக்கர்கள் ஒரு திருமண விழாவில் குழுமி இருக்கும் பொது மக்கள் மீது கண்மூடித் தனமாக சுட்டுத் தள்ளுதல், தடுத்து வைக்கப்பட்ட கைதிகளை நீதிக்கு புறம்பாக கொலை செய்தல், அபு கிரைப் சிறையில் கைதிகளின் உடல் பாகங்களை அறுத்து விற்றல் போன்ற பல காட்சிகளே அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்ப காரணமாக இருந்தன. இதுவரை வந்த பல ஹோலிவூட் படங்கள் அரேபியரை "பயங்கரவாதிகளாக, கெட்டவர்களாக, வில்லன்களாக" சித்தரித்துள்ளன. அத்தகைய திரைப்படங்கள் உலகம் முழுவதும் (அரபு நாடுகளில் கூட) திரையிடப்பட்டன. அதையிட்டு அமெரிக்காவில் எவரும் ஆட்சேபிக்கவில்லை. "ஓநாய்களின் பள்ளத்தாக்கு - ஈராக்" என பெயரிடப்பட்ட இந்த திரைப்படம், துருக்கி தேசியவாத-இஸ்லாமியவாத கோணத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய திரையரங்குகளில் 'ஹவுஸ் புல்' காட்சிகளாக ஓடியது.

"ஓநாய்களின் பள்ளத்தாக்கு - ஈராக்" என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் சில பகுதிகள்:



Wednesday, October 21, 2009

கிறீஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி - விசேஷ அறிக்கை

(கிறீசில் இருந்து கிடைத்த விசேஷ அறிக்கை)
ஐரோப்பிய நாடுகளின் கதவுகள் யாவும் அகதிகளுக்காக அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துருக்கிக்கு அருகில் இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டான கிறீஸ் இலகுவான நுழைவாயிலாக மாறியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோர விரும்பும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் அகதிகள் முதலில் துருக்கி வருகின்றனர். அங்கிருந்து ஆட்கடத்தல்காரரின் துணையுடன் சிறு கப்பல்களில் கிறீஸ் நோக்கி பயணிக்கின்றனர்.

இவ்வாறு தான் துருக்கிக்கு அருகில் இருக்கும் கிரேக்க தீவுகளுக்கு பெருமளவு அகதிகள் வந்து சேர்கின்றனர். கிரேக்க அரசு, தஞ்சம் கோரிய அகதிகளை லெஸ்வொஸ் (Lesbos) என்ற தீவில் உள்ள தடுப்புமுகாமில் சிறை வைக்கின்றது. சிறைமுகாம் அதிகாரிகள் அகதிகளை என்ன செய்வது என்ற முடிவை எடுப்பார்கள். அனேகமாக முப்பது நாட்களுக்குள், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற முடிவைக் கொண்ட கடிதத்தை ஒப்படைப்பார்கள். அந்தக் கடிதத்துடன் விடுதலையாகும் அகதிகள் பலர் ஏதென்ஸ் நகர் வந்து சட்டவிரோதமாக தங்கிவிடுகின்றனர்.

வசதிக் குறைபாடுகளைக் கொண்ட தடுப்புமுகாமில் கால்நடைகளைப் போல அடைத்து வைக்கப்பட்ட அகதிகள் அன்றாடம் வதைபடுகின்றனர். கட்டிடத்தின் கொள்ளளவை விட மூன்று மடங்கு அகதிகள், அதாவது 900 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 19 அக்டோபர் அன்று, நரகவேதனையை பொறுக்கமுடியாத அகதிகள் தாம் இருந்த முகாம் கட்டிடத்திற்கு தீவைத்துள்ளனர். முகாமின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமானதுடன், இரு அகதிகள் மயக்கமுற்றனர். லெஸ்வொஸ் தடுப்புமுகாம் அகதிகளின் கிளர்ச்சி இரகசியமாக படம்பிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு அனுப்பப்பட்டுள்ளது. கிரேக்க சமூக ஆர்வலர்களால் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள "தடுப்புமுகாம் வீடியோவை" இத்துடன் இணைத்துள்ளேன்.


Tuesday, October 20, 2009

இஸ்ரேலில் சர்ச்சையை கிளப்பிய துருக்கி டி.வி. சீரியல்

தற்போது துருக்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "மெகா தொடர்" சீரியல் ஒன்று இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவில் விரிசலைஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சித் தொடரில் வரும் இஸ்ரேலிய இராணுவம், ஒரு (பாலஸ்தீன) சிறுமியை அருகில் நின்று சுட்டுக் கொல்வதைப் போல காட்சி இடம்பெற்றுள்ளதே சர்ச்சைக்கு காரணம்.(Israel: Turkish TV paints troops as child-killers) இஸ்ரேலிய அரச மட்டத்தில் இருந்து கண்டனக்கணைகள் வந்த போதிலும், குறிப்பிட்ட தொடரை நிறுத்துவதற்கு துருக்கிஅரசு மறுத்து விட்டது. காஸா மீதான இராணுவ நடவடிக்கை, இஸ்ரேலிற்கும், துருக்கிக்கும் இடையிலான நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய துருக்கி சீரியலில் இருந்து சில காட்சிகள்:

Monday, October 19, 2009

இஸ்ரேலிய போர்க் குற்றவாளியை கௌரவித்த சிக்காகோ பல்கலைக்கழகம்

(15 Oct.,Chicago,USA) சிக்காகோ பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்த சிறப்பு விரிவுரையாளரான இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஒல்மேர்ட் மாணவர்களின் எதிர்ப்புக்கு உள்ளானார். விரிவுரையாற்றிய மண்டபத்திற்கு வெளியே சுமார் 150 மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மண்டபத்தினுள்ளேயும் ஒல்மேர்ட்டை பேச விடாமல் தடுத்து குழப்பம் விளைவித்தனர். "ஒல்மேர்ட் போர்க் குற்றவாளி" என்ற கூக்குரல்கள் மண்டபத்தின் நாலாபக்கத்தில் இருந்தும் கேட்டன. காஸா இராணுவ நடவடிக்கையில் கொள்ளப்பட்ட பாலஸ்தீன சிறுவர்களின் பெயர்கள் சத்தமாக வாசிக்கப்பட்டன. ஒல்மேர்ட்டின் ஆட்சிக்காலத்தில் தான் காஸா பல்கலைக்கழகம் இஸ்ரேலிய படையினரால் தகர்க்கப்பட்டது. அப்பேர்ப்பட்ட கிரிமினலை சிக்காகோ பல்கலைக்கழகம் விரிவுரையாற்ற அழைத்த செயலை கண்டித்தனர். ஒல்மேர்ட் பதவியில் இருந்த போது தான், லெபனான், காஸா மீதான இராணுவ நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டமை இங்கே நினைவுகூரத்தக்க்கது.
மண்டபத்தினுள் ஊடகவியலாளர்கள் கூட கமெராக்கள் கொண்டு வரக்கூடாது என்ற தடையுத்தரவு இருந்தது. இருப்பினும் மாணவ ஆர்வலர்கள் இரகசியமாக எடுத்துச் சென்ற வீடியோ கருவி மூலம், அங்கே நடந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளனர்.


Sunday, October 18, 2009

ஐரோப்பாவின் வெள்ளையின பயங்கரவாத இயக்கம்

ஐரோப்பாவில் வெள்ளையின மேலாண்மையை நிறுவ போராடும் (வலதுசாரி) பயங்கரவாத குழு ஒன்று இயங்கி வருகின்றது. Blood & Honour , உலகின் மிகப்பெரிய தலைமறைவு நவ நாஸிஸ இயக்கம். அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கி வருகின்றது. இதன் உறுப்பினர்கள் பெரும்பாலும் இள வயதினர். ஹிட்லர் இவர்களின் ஆதர்ச நாயகன். பெல்ஜியத்தில் 'ஆர்டணன்' பகுதியில் இடம்பெறும் வருடாந்த ஒன்றுகூடல் பற்றிய ஆவணப்படம் இது.

நெதர்லாந்து/பெல்ஜிய ஊடகவியலாளர் சிலர் நவ நாஸி உறுப்பினர் போல நடித்து, இரகசிய ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை படமாக்கியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகை தரும் நவ நாசிகள், ஆர்டணன் பகுதியில் பாசறை அமைக்கின்றனர். ஆர்டணன் பகுதியில் 2 ம் உலகப்போரில் மரணமுற்ற ஜெர்மன் நாசிப் படையினரின் கல்லறைகள் உள்ளன. இந்தக் கல்லறைகளுக்கு மலர்வளையம் சாத்தி, நினைவுகூருகின்றனர். நிகழ்வின் சிறப்பம்சமாக ஹிட்லரைப் போல தோற்றமளிக்கும் ஒருவர் உரையாற்றுகின்றார்.

"நெதர்லாந்தில் தூய வெள்ளை இனத்தவர்கள் அருகி வருகின்றனர். மொரோக்கர்கள், துருக்கியர்கள் போன்ற அந்நியர்கள் அதிகரித்து வருகின்றனர். நெதர்லாந்து வெள்ளையர்களில் அநேகமானோர் ஓரினச் சேர்க்கையாளர்கள்." என்ற உரைக்கு கூடியிருக்கும் கூட்டம் ஆர்ப்பரிக்கின்றது. "அந்தந்த இனங்கள் அவரவர்க்கு என ஒதுக்கிய தேசங்களில் வாழ வேண்டும். பல்லின கலாச்சார சமூகம் நடைமுறைச் சாத்தியமில்லை. இதை ஹிட்லர் அன்றே பறைசாற்றினார்." இவ்வாறு கூறுகின்றார், நவ நாஸி உறுப்பினர் ஒருவர். பாசறையில் நாஸிஸ சின்னங்கள் பொறித்த டி-சேர்ட்கள், ஸ்டிக்கர்கள், மற்றும் வெள்ளையின மேலாண்மையை புகழும் பாடல்கள் கொண்ட குறுந்தகடுகள் விற்பனையாகின்றன.

Blood & Honour உறுப்பினர்கள், இரகசியமாக ஆயுதப் பயிற்சி பெற்று வருகின்றனர். நெதர்லாந்தில் கைது செய்யப்பட்ட தலைமைக்குழு உறுப்பினரிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. நாஸிஸ சித்தாந்தம், இரகசிய கூட்டங்கள், ஆயுதப் பயிற்சி பெறுதல், ஆயுதங்கள் சேகரித்தல், இவை யாவும் Blood & Honour ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இதுவரை குறிப்பிடத்தக்க பயங்கரவாத செயல் எதிலும் ஈடுபடாத போதிலும், வருங்காலத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நெதர்லாந்தும் Blood & Honour அமைப்பை தடை செய்ய ஆலோசித்து வருகின்றது.
(குறிப்பு: வீடியோ நெதர்லாந்து மொழி பேசுவதால், தமிழில் மேலோட்டமாக மொழிபெயர்த்துள்ளேன். )

sitestat


கிறீஸ் பொலிஸ் சித்திரவதையால் அகதி மரணம், ஏதென்ஸ் நகரசபை முற்றுகை

கிறீஸ், ஏதென்ஸ் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்து வந்த பாகிஸ்தானிய அகதிஒருவர்வழக்கமான பொலிஸ் சோதனையின் போது கைது செய்து கொண்டுசெல்லப்பட்டார். குறிப்பிட்ட அகதி காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதன் காரணமாக அக்டோபர் 10 ம் திகதி மரணமுற்றார். இந்தசம்பவம் நடந்து ஒரு வாரத்தின் பின்னர், வெளிநாட்டவரும், உள்நாட்டு இடதுசாரி அமைப்புகளும் இணைந்து ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஒழுங்கு செய்தனர். ஊர்வலத்தின் முடிவில் ஏதென்ஸ் புறநகரான 'நிகையா' தொகுதி நகரசபைகட்டிடம் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரரால் ஆக்கிரமிக்கப்பட்டநகரசபையில் இருந்து ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கையைகீழேதருகிறேன். ஆர்ப்பாட்டத்தை கலைக்க ஏதென்ஸ் பொலிஸ் எடுத்தநடவடிக்கையை காட்டும் படங்களும், வீடியோவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.



STATEMENT FROM THE OCCUPIED TOWN HALL OF NIKAIA

Four-hundred demonstrators marched together today, October 17, on the streets of Nikaia in a demonstration of rage for the recent assassination of 25-year old Pakistani migrant Mohammad Atif Kamran, who passed away following his torturing in the police station of Nikaia. The demonstration had been called by anarchist collectives and a local assembly of the neighboring areas.

We walked through the area’s main streets, passed by the house of the assassinated Atif and headed toward the police station. The large numbers of Riot Police (MAT) and motorcycle forces (Delta and Zita) that were “accompanying” the demonstration parading in its front, back and side streets, were highlighting the official stance of the now Socialist Ministry of Public Order (now called Ministry of Citizen Protection!): To cover up and support the torturers, assassins, the police occupation of the area in face of the appearance of the world of struggle and solidarity. After all, what happened will continue to happen: beatings, torturing and ridiculing of detainees in all police stations across the country.

During our gathering and for the largest part of the demonstration the rain was falling heavy. And yet at the point of passing in front of the police station of Nikaia it wasn’t just the rain drops. The unit protecting the police station also took a rain of stones. The orderly continuation of the demonstration and our retreat from that point was met with the combined attack by Riot Police units in both the back and side part of the demo. The people at the sides of the demo, chained up, held up against the police attacks and locals watching from the pavements and balconies were jeering and swearing at the police occupation force. Yet in-between the mist of the tear gas and the attack of the Riot Police some of us were isolated from the main demonstration and so, were detained by police.

The demonstration ended up at a specific area of Nikaia (”perivolaki”), as previously agreed. Given the police detentions, a large part of those of us gathered there occupied the Town Hall of Nikaia, to demand the immediate release of our captioned comrades. Some of us who left in their vehicles were also stopped at a nearby junction and detained, too. The exact number of the detained is unknown (even if we do know some names for sure) but is definitely a two-digit one, while some have already been charged. The new state doctrine of “democracy and an iron fist” is here in its full glory – as announced by the new minister of Polic Order himself – against all those who revolt and resist. Same as in the gathering of workers and unemployed of the shipyards of Perama on October 15 outside the Ministry of Employment. Same as in Exarcheia, occupied for days now. Same as in the charges against high school students occupying their schools. Same as in the forthcoming mobilisation of the shipyard workers of Piraeus against the selling-off of the port to the COSCO corporation, or the 1400 workers threatened with firing at the shipyards of Skaramangas, in Attica.

Police barbarity is no more than the repressive version of the state-capitalist barbarity: repression, exploitation, submission, death.

What the new political administration came to largely handle was the social dimension of the crisis of our times: the expanded disobedience and confrontation with the demands of the political and financial elites. No illusions then. There shall be no change coming from the new government. As always, after all. State terrorism continues and along with it, continues the struggle for social and individual emancipation, for a free world, without authority.

IMMEDIATE RELEASE OF THE DETAINED DEMONSTRATORS

DROP ALL CHARGES

IMMEDIATE RETREAT OF THE POLICE FORCE FROM THE NEIGHBOURHOOD OF NIKAIA

AND AROUND THE OCCUPIED TOWN HALL

Saturday, October 17, 2009

சிங்கப்பூரில் சீரழியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்

கந்துவட்டிக்கு கடனை வாங்கி வெளிநாடு சென்று, தொழில் இன்றி ஏமாந்து நாடு திரும்பியவர்களின் கண்ணீர்க்கதை இது. அல்ஜசீராவின் இந்த ஆவணப்படம், முகவர்களிடம் ஏமாந்த பங்களாதேஷ் தொழிலாளர்களின் துயரத்தை சொல்கின்றது. இந்த அப்பாவிகளின் பணத்தை விழுங்கிய முதலைகள் முகவர்களா? அல்லது சிங்கப்பூரின் போலி தொழில் வழங்குனர்களா? சர்வதேச கிரிமினல் கும்பலின் மோசடியை ஆராயும் ஆவணப்படம்.

Friday, October 16, 2009

கொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்

ஆகஸ்ட் 15 ல் கொழும்பு மாநகரில் இரு தமிழ் சிறுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த செய்தி பெருமளவு தமிழ் ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. காரணம், அந்த தமிழ் சிறுமிகளை கொன்றவர்கள் இனவெறியர்கள் அல்ல, மாறாக பணவெறியர்கள். மலையக ஏழைத் தமிழ் சிறுமிகளை வீட்டு வேலைக்காரிகளாக வைத்திருந்து உழைப்பை சுரண்டும் கொழும்பு பணக்காரர்கள் செய்த கொலை அது. அதனால் அனைத்துலக தமிழ் ஊடகங்கள் வர்க்க பாசத்தால், அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இலங்கையில் "புதிய பூமி" மாதப் பத்திரிகையில் வந்த செய்திக் கட்டுரை இங்கே நன்றியுடன் மறுபிரசுரமாகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வீட்டுப் பணியாளர் எனும் இனிப்பு

'லயங்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை. எங்களால் நல்ல உணவையோ உடையையோ கொடுக்க முடிவதில்லை. நன்கு உண்டு உடுத்தாவது இருக்கட்டும்" என்று சொல்லிச் சொல்லியே தான் மலையகப் பெற்றோர்களில் கணிசமானோர் அவர்களின் பிள்ளைகளை வீட்டு வேலைகளுக்காக அனுப்புகின்றனர். அவ்வாறு வீட்டு வேலைகளுக்காகச் செல்வோர் உழைப்புச் சுரண்டலுக்கு மட்டுமன்றி பாலியல் துன்புறுத்தல்கட்கும் மன உளைச்சல்கட்கும் ஆளாகின்றனர். அவர்களில் வருடாந்தம் பலர் அகால மரணமான செய்திக ளையும் கேட்டிருக்கிறோம். ஆகஸ்ட் 15ம் திகதி இரண்டு சிறுமிகளின் சடலங்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் கழிவு நீர் கால்வாயில் காணப்பட்டன. அவை லக்~பான தோட்டப் பிரிவைச் சேர்ந்த சுமதி, ஜீவராணி ஆகியோரின் சடலங்கள். அவர்கள் 'வீட்டுப் பணியாளர்களாக" கொழும்புக்கு உழைக்கச் சென்றவர்கள். நல்ல உணவை உண்ணவும் நல்ல உடையை உடுக்கவும் சென்றவர்கள். அதனாலேயே கழிவு நீரில் சடலமாக மிதந்தவர்கள்.

அதுமட்டுமல்ல, இறந்த பிறகு அவர்களுக்கு கௌரவப் பட்டமும் கொடுக்கப்பட்டது: அது தன்னினச் சேர்க்கையாளர்கள். ஜீவராணி (13 வயது) சுமதி (14 வயது) ஆகிய சிறுமிகள் வீட்டுப் பணிக்குச் சென்ற இடத்தில் தன்னினச் சேர்க்கையில் ஈடுபட்டதாகவும் அதற்கு இடையூறு ஏற்பட்டதால் அவர்கள் கழிவு நீர்க் கால்வாயில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர் என்றும் அவர்களின் எஜமானர்கள் கூறுகின்றனர். வீட்டு வேலைக்காகச் சென்றவர்கள் சடலமாக வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இது முதலாவது தடைவையும் அல்ல கடைசித் தடவையும் அல்ல. 14 வயதானவர்களை வேலைக்கு அமர்த்தலாம் என்று சட்டம் சொல்லுகிற போதிலும் வீட்டு வேலைக்காக 14 வயதுக்கு குறைந்தவர்களும் அமர்த்தப் படுகின்றனர். 14 வயதுக்கு மேற்பட்டவர்களுங் கூட, வேலைக்கு அமர்த்தப்படும் இடங்களில் பாதுகாப்பு அற்றவர்களாகவே இருக்கின்றனர்.

பொதுவாக வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுபவர்கள் தொழிற் சட்டங்களின் ஆளுகைகளுக்கு உட்பட்டவர்களாகவோ அவற்றின் பாதுகாப்புக்கு உட்பட்டவர்களாகவோ இல்லை. இந் நிலையில் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களின் நிலை மிகவும் மோசமானது. மலையகச் சிறார்கள் நிலை பரிதாபகரமானது.

அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட சுமதி, ஜீவராணி ஆகியோரை அதே தோட்டத்தைச் சேர்ந்த தரகர் ஒருவர் கொழும்புக்கு கொண்டு சென்று 'ரணா ஏஜன்சி" எனும் வீட்டு வேலைக்களுக்கு சிறுவர்களை வழங்கும் முகவர் நிலையத்தில் ஒப்படைக்க அந் நிலையம் அவர்களை பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகளுக்கு அனுப்பியுள்ளது. அத் தோட்டத்தைச் சேர்ந்த தரகருக்கு ஒருவரை வேலைக்கு வழங்கும் போது மூவாயிரம் கொடுக்கப் படுவதாகவும் ரணா ஏஜன்சி ஒருவரை வேலைக்கு கொடுக்கும் போது எஜமானர்களிடமிருந்து ரூபா 10,000 பெற்றுக் கொள்வதாகவும் தெரிய வருகிறது. இந்த ரணா ஏஜன்சி தோட்டங்கள் தோறும் தரகர்களை வைத்திருக்கிறார்கள். அந்தத் தரகர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பியே வறுமையில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்புகிறார்கள். இந்த இரண்டு சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அவர்களின் பெற்றோர்கள் சந்தேகம் எழுப்பினர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் மரண விசாரணை நடத்தும் போது பெற்றோர்களின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் செய்த சமர்ப்பணத்தையடுத்து ஆகஸ்ட் 17ந் திகதி புதைக்கப்பட்ட சடலங்கள் ஆகஸ்ட் 27ந் திகதி தோண்டி எடுக்கப்பட்டன. அவை கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீள் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட 1வது பிரேத பரிசோதனைகள் அறிக்கையின் சடலங்கள் உடல்களில் காயங்கள் இருக்கவில்லை என்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படவில்லை என்றும் நீரில் மூழ்கியதாலேயே மரணம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால் சடலங்களை அடையாளங் காணும் போது உடலில் காயங்களைக் கண்டதாக சிறுமிகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர். அத்துடன் சுமதி என்ற சிறுமி எழுதியதாக காட்டப்படுகின்ற கடிதத்தில் அவர்கள் இருவரின் இறப்புக்கும் எஜமானர்களும் எஜமானிகளும் காரணம் அல்ல என்று எழுதப்பட்டுள்ளது. இக் கையெழுத்து சுமதி உடையது அல்ல என்று சுமதியின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

உண்மை எவ்வாறு இருந்த போதிலும் மரண விசாரணைகளில் அச் சிறுமிகளின் மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது சாட்சியங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். ஆனால் இந்த இரண்டு சிறுமிகளின் மரணங்கள் மலையகத்தை உலுக்கியுள்ளன. சிறுவர்களை வீட்டு வேலைக்கு அனுப்புவது பற்றி சிந்திக்க வைத்துள்ளன எனலாம்.

சில அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் இச் சம்பவத்தை தங்கள் தங்கள் அரசியல் இருப்பிற்கான பிரசாரமாகப் பயன்படுத்தினர். சில அரசசார்பற்ற நிறுவனங்கள் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான செயல்திட்ட அறிக்கைகளை தயாரிக்கப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அப்பால் நேர்மையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

'மலையகச் சிறார்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவதும் மலையக தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலமும்" என்ற தலைப்பில் பகிரங்க கருத்தரங்கை 'புதிய மலையகம்", செம்ரெம்பர் 6ந் திகதி நடத்தியது. அதில் தொழிலாளர்களின் பிரசன்னம் பெரிய எண்ணிக்கையில் இருக்கவில்லை. ஆனால் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதில் சில தொழிற் சங்கத் தலைவர்கள் உரையாற்றிவிட்டுச் சென்று விட்டனர். கருத்தரங்கின் முடிவுவரை இருந்தவர்கள் முக்கியமான தீர்மானங்களை எடுத்தனர்.

18வயதுக் குறைந்த மலையகச் சிறார்களை வீட்டு வேலைக்கு அனுப்புவதில்லை என்ற பண்பாட்டு ரீதியான முடிவுகளை எடுத்தனர். எவ்வளவு தான் பொருளாதாரப் பிரச்சனை இருந்தாலும் வீட்டு வேலைகளுக்கு சிறார்களை அனுப்புவதில்லை என்று மலையகம் எங்கும் விழிப்புணர்வு வேலைத் திட்டங்களைப் 'புதிய மலையகம்" ஏனைய அமைப்புக்களுடன் ஐக்கியப்பட்டு முன்னெடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டது.

அதே வேளை வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்படுபவர்களுக்கு தொழிற் சட்ட ரீதியாகவும் விசேட ஏற்பாடுகளின் ஊடாகவும் பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் அங்கு முன்வைக்கப் பட்டது.

சம்பள உயர்வு வேண்டி ஒத்துழையாமைப் போராட்டம் நடைபெறுகின்ற போது அந்த இரண்டு சிறுமிகளின் மரணம் தோட்டத் தொழிலாளர்களின் வறுமையைப் போக்கும் அளவுக்கு சம்பள உயர்வு அவசியம் என்பதையே வலியுறுத்தி வேண்டியுள்ளது.

எமது நாட்டுச் சூழலில் வீட்டு வேலை என்பது அடிமை வேலையே 'வீட்டுப் பணியாளர்கள்" என்ற அழகு தமிழில் அழைக்கப்பட்;டாலும் வீட்டு வேலை செய்வோர் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்கள் திறன் மிக்க தொழிலாளர்களாக மதிக்கப்படுவதில்லை. அதிலும் சிறுவர்களை வீட்டு வேலைக்கு அனுப்புவதன் மூலம் எதிர்கால அடிமைகளை உருவாக்கவே துணைபோகின்றோம்.

200 வருட மலையக மக்களின் அடிமை வாழ்வு தகர்க்கப்பட போராட்டங்கள் நடைபெறுகின்ற போது மேலும் மேலும் அடிமைகளை பயிற்றுவிக்கத் துணை போவதைத் தவிர்ப்போம். சிறார்களை வீட்டு வேலைக்கு அமர்த்தாது இருப்போம்.

(நன்றி: புதிய பூமி, செப்டம்பர் 2009 )

Thursday, October 15, 2009

வெடி குண்டுகள் விளையும் பூமி - ஆவணப்படம்

லாவோஸ், உலகில் அதிகமானோரால் அறியப்படாத அந்த நாட்டின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல வருடக்கணக்காக தொடர்ந்து குண்டுவீசினார்கள். உலகில் இதுவரை இல்லாத அளவு மிக அதிகமான குண்டுகள் லாவோஸ் மீது போடப்பட்டன. ஊடகங்களின் கண்களைக் கட்டி நடந்த யுத்தம் அது. அதனால் அயலில் உள்ள வியட்நாம் போர் சர்வதேச கவனத்தை ஈர்த்த அளவிற்கு லாவோஸ் பற்றி யாரும் பேசவில்லை. பயிர் செய்யும் நிலங்கள் அகற்றப்படாத குண்டுகளால் தரிசாகிக் கிடக்கின்றன. லாவோஸ் நாட்டின் ஏழ்மைக்கு அதுவும் ஒரு காரணம். பல தசாப்தங்களுக்கு பின்னரும் லாவோஸ் மண்ணில் மறைந்துள்ள வெடிக்காத குண்டுகளைப் பற்றி சொல்கிறது இந்த ஆவணப்படம்.


Part 1

Part 2

Wednesday, October 14, 2009

மலேசிய தடுப்புமுகாமுக்குள் வதைபடும் ஈழத்தமிழ் அகதிகள் -ஆவணப்படம்

ஈழத்தமிழ் அகதிகள் குழுவொன்று படகு மூலம் அவுஸ்திரேலியா செல்லும் வழியில் அகப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. அதேநேரம் அந்த அகதிகள் அனைவரும் மலேசியாவில் இருந்து புறப்பட்டவர்கள் என்ற செய்தி அதிகம் அறியப்படவில்லை. அவுஸ்திரேலியாவின் தொலைக்காட்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் மலேசியா சென்று, அங்கே அகதிகள்படும் இன்னலை வெளிக் கொண்டு வந்துள்ளனர். மோசமான மனித உரிமை மீறல்களைப் புரியும் நாடுகளில் ஒன்றான மலேசியாவில், அகதிகள் சட்டவிரோத குடியேறிகள் போன்று நடத்தப்படுகின்றனர். இதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அதிரடிப்படை, UNHCR மூலம் பதிவு செய்த அகதிகளையும் பிடித்துச் சென்று சிறையில் அடைத்து வைக்கின்றது. பெரும்பாலானோர் கோலாலம்பூர் நகருக்கு வெளியே உள்ள தடுப்பு முகாமுக்குள் மாதக் கணக்காக வதை படுகின்றனர். மலேசிய அரசு அகதிகளை கடுமையாக நடத்துவது அவுஸ்திரேலிய அரசுக்கும் ஏற்புடையதாக உள்ளது. SBS தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த ஆவணப்படம், அவுஸ்திரேலியா, மலேசியாவின் மனிதநேயமற்ற மறுபக்கத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.
ஆவணப்படத்துக்கான சுட்டியைஅனுப்பி வைத்த நண்பர் பிரதீப்பிற்கு எனது நன்றிகள்.


Malaysia: Detention Center


Good news for Canberra, 114 Sri Lankan Tamil’s arrested in Malaysia. They were waiting for a boat to take them to Australia but their journey’s been cut short. As Dateline discovered during midnight raids and a rare visit inside a detention centre, Malaysia could never be accused of being soft on illegal immigration. So with the Australian government determined to stop asylum seekers from leaving Malaysia, should it take any responsibility for what happens to them afterwards?

DAVID MANNE, REFUGEE AND IMMIGRATION LEGAL CENTRE: It's a place which simply does not provide any viable protection to refugees, and in fact, and in many respects, provides a place of further place of danger for them.

CHRIS EVANS, MINISTER FOR IMMIGRATION: Well I've had no evidence of mistreatment in recent times raised with me. Certainly, we encourage our neighbours to treat people fairly.

REPORTER: Has Australia ever raised the question of human rights and the treatment of refugees here?

ABU SEMAN YUSOP, DEPUTY MINISTER FOR HOME AFFAIRS: Can you cut that?
If you're an asylum seeker in Malaysia, hoping to reach Australia, your journey might start here - the ferry to Pulau Ketam, or Crab Island. From these mangrove swamps and stilt villages, it's not far to Indonesian Sumatra, just across the Malacca Strait.

VILLAGER: It's easier to get over there from here. You can go straight to the west and get to Indonesia. You go by boat. If it's a powerful boat, it only takes four hours.
There are no immigration controls here or at the port on the mainland. Most of the illegal traffic across the Strait is made up of Indonesian workers, but locals recall seeing Iraqis and people smugglers here earlier this year.

VILLAGER 2: Everything is organised. Snake heads are around. They wait here for the snakeheads to take them over. We know they're going to Australia. There are women and children as well. Through binoculars we saw women dressed in black.
In June, 42 Afghan and Pakistani migrants on board two boats were arrested by the marine police. But I hear rumours, later confirmed by the Australian Government, that the people smugglers are assisted by some officials.

VILLAGER 3: They just give the island's council some money. So they don't get arrested. It's the same everywhere else. That's enough... I'd better not tell you too much.
Australia's worried that Malaysia is a weak link in its border protection chain.

CHRIS EVANS: Well, basically a second pipeline opened up, largely as a result of the Tamils fleeing Sri Lanka, and basically we have a couple of people smuggling syndicates who have found the pressure in Indonesia a bit tough and have looked for an alternative route, if you like, and they have had this operation running out of Malaysia.

There is a constant flow of asylum seekers into Malaysia and each weekday morning they can be found lining up outside the United Nations High Commission for Refugees. There are 49,000 refugees registered with the UNHCR here, and possibly another 45,000 who aren't on the books. 90% have fled from Myanmar, or Burma. Of the rest, most are from Afghanistan, Iraq, and, increasingly, Sri Lanka. Few have any chance of getting resettled. This young couple are Tamils who've recently arrived from Sri Lanka. Few have any chance of getting resettled. This young couple are Tamils who’ve recently arrived from Sri Lanka.

TAMIL MAN: We've applied to the UNHCR, hoping to get their protection. We hope they'll give it to us.

They have yet to discover how little protection the UNHCR can actually provide.

UNHCR EMPLOYEE: Once you get your card, there is a phone number at the back which starts with '012', OK, it's at the back of your card, right?
These refugees, from Myanmar, are here to collect the cards that prove their claims have been recognised by the UNHCR. But their new status as refugees isn't recognised under Malaysian law.

UNHCR EMPLOYEE: '012' is the detention hotline. It's open from 8:00am in the morning until 11:00pm at night, seven days a week. And this is the number you call if you have any problems with the authorities.
The Malaysian Government considers all these refugees to be illegal immigrants. So, what's in store here for the people that Australia is trying to keep out?
A few crowded rooms are a sanctuary of sorts for these Tamil families from Sri Lanka. They've been in Malaysia for 18 months, and all have terrifying stories of the threats and violence they escaped.

TAMIL REFUGEE: My sister's three kids and my brother's child. All in all, seven were taken and shot dead. They came to take them away while they were asleep. At dawn, they blindfolded them and took them away.
But the families are vulnerable here too. As illegal immigrants, they're not allowed to work and the children can't go to school. They also live in constant fear of being arrested.

TAMIL REFUGEE: The police caught me a few times. When I was caught, they'd take everything from me. They'd take my papers, handcuff me and take me away. Sometimes we give them money, whatever money we have. Otherwise we hand over our phone. If we don't give them the money, they take us away.

TAMIL REFUGEE 2: If we're caught, our children are left at home alone. That's why we go out as a family and get back home as a family. If we're in jail, the kids are alone. But if we all get caught, we're all going to suffer. That's what we fear.
So they don't risk leaving home unless it's absolutely necessary. For more than a year now, they've lived in a state of self-imposed house arrest.

REPORTER: Many refugees I've met describe being harassed by the police - forced to pay bribes, sometimes threatened with having their UNHCR cards confiscated. Have you heard these allegations? Are these allegations being investigated?

ABU SEMAN YUSOP: There's no report made. If there is a report made, of course our official will do investigation of the matter.

REPORTER: But the UNHCR says it has raised these complaints with you, so have many other human rights groups.

ABU SEMAN YUSOP: But as far as we are concerned, we have not received any complaint.
Even more than the police, this is whom refugees in Malaysia truly fear. RELA is a militia made up of 500,000 volunteers. After just two days' training, the government uses them to crack down on illegal immigrants. It's after midnight, and they're preparing to launch a surprise raid on an immigrant neighbourhood. As I film, the volunteers are told to be on their best behaviour.

RELA OFFICER: Don't get excited just because reporters are here. You want your faces in the newspaper or on TV tonight? I ask all the leaders to ensure that their troops don't act violently. Don't hit or kick. Be gentle. Treat them like your girlfriend.

RELA has been condemned in the past for human rights abuses, but was happy for me to tag along. Malaysia has more than 1 million illegal immigrants and believes tough measures are necessary.

REPORTER: Why are they such a problem, the illegal immigrants?

RELA COMMANDER: Social life. Make noisy. Drink! That's why the local people report to us.

REPORTER: But it's just the illegal immigrants that drink and make noise? Don't the legal ones...?

RELA COMMANDER: Same. Both. Both, both sides.

REPORTER: So all the immigrants are a problem, but you just target the illegal ones?

RELA COMMANDER: Yes, yes, the illegal ones only.

The volunteers spread out and start going from door to door looking for migrants. Their job is to take anyone who's not Malaysian outside to have their documents checked. At this stage, it doesn't matter if they're here legally or not. No-one likes being woken up in the middle of the night.

RELA OFFICER: Be quick, otherwise we'll break in. Take your passport with you. My passport and mobile phone? Yes.
Within an hour, several hundred people have been dragged out of bed.

RELA OFFICER: Walk properly, don't walk like that. Walk properly. Hold the shoulders.
Out on the street, their documents are taken and examined by officers from the Immigration Department. They decide who should be arrested and who gets to go back to bed. Although refugees are also illegal immigrants, the government insists they are not arrested or detained.

REPORTER: Have you found anyone here who has a UNHCR card?

MALAYSIAN IMMIGRATION OFFICIAL: No. Obviously we release them.

REPORTER: You release the people with the UNHCR card?

MALAYSIAN IMMIGRATION OFFICIAL: Yes, yes.

The UNHCR says fewer refugees are being picked up these days, but that it's still common. Most I spoke to said they had a friend or relative who'd been arrested. When the prisoners are taken back to RELA headquarters, I discover that tonight is no exception.

REPORTER: Where are you from?

ABDUL RAHIM, DETAINED REFUGEE: I am from Myanmar.

Contrary to what I was told, six of the men here have been arrested despite being registered as refugees.

REPORTER: You have a UNHCR card?

ABDUL RAHIM, DETAINED REFUGEE: Yeah, sure, I here already five years.

REPORTER: And you've given them the card?

ABDUL RAHIM, DETAINED REFUGEE: Yeah, my name is Abdu Rahim, number of card 03C13837. Just so many problems coming here and I tell you these people here are not good. Tell me like animals. Why? I don't know.
Abdu Rahim has tried to call the UNHCR detention hotline, but it's the middle of the night and it's closed.

REPORTER: So what will happen if you can't get hold of them at the office?

ABDUL RAHIM: I don't know about this. Now I no good feeling.

REPORTER: Sir, tell me what happens if your men do find someone with a UNHCR card. What is the procedure?

RELA COMMANDER: So, the immigration asks us to detain them, then we have to bring them to the immigration depot. We're going to bring them to depot Lenggeng.

REPORTER: The detention centre?

RELA COMMANDER: Yes, yes.

This is where Abdul Rahim and all the others will be taken - the Lenggeng immigration depot outside Kuala Lumpur. This is the first time Malaysia has allowed a foreign journalist to film inside one of its detention centres. The men's section is meant to house up to 1,200 people, but right now, more than 1,400 are squeezed inside.

DEPOT OFFICER: As you can see now, actually they are not comfortable inside here. And then they're very stressed out when they're kept for more than a month. Actually they fight amongst them.

DETAINED IMMIGRANT 1: The food is very.... I don't know if it's contaminated, if the dogs eat the food - dogs cannot eat it.

DETAINED IMMIGRANT 2: Have you seen the tray the food, the tray we eat? You go and see, you know?

DETAINED IMMIGRANT 1: You want to see? See this? See this? See this?

Each prisoner gets some rice, and a couple of pieces of meat and vegetable. The stench is awful.
I've asked if there are any prisoners here from Sri Lanka. This is Shanmulingham. He's a Tamil and says he fled Sri Lanka last year because the army wanted to arrest him.

REPORTER: Have you gone to the UNHCR at all? Have you claimed asylum?

SHANMULINGHAM: Yes, I have. I have a card. They took my card and arrested me.

He says he's been here for six weeks and he's waiting for the UNHCR to organise his release.
And this is Prabhakaran - he's been here for a month and is also registered as a refugee. He's nervous about speaking in front of the immigration officers.

REPORTER: How have you found life in Malaysia as a refugee?

PRABHAKARAN: I can't tell you much. We live in fear over there and we're living in fear here too. We don't know our fate. I've been here a month. Nothing is certain.

REPORTER: When I visited the immigration detention centre I found several refugees there who had UNHCR cards.

ABU SEMAN YUSOP: I don't think so.

REPORTER: I did, and the UNHCR confirms this. And in fact the immigration officials also confirm this.

ABU SEMAN YUSOP: That's what the information I've been given by, ah my personnel.

REPORTER: That there are no refugees being held in the detention centres. That's what you've been told?

ABU SEMAN YUSOP: Yep.
According to the UNHCR, the situation has improved in the last few months. It now has access to the detention centres, but it says red tape means refugees, who shouldn't be arrested in the first place, still spend too long in detention.

REPORTER: Does it concern you if registered refugees in Malaysia are being arrested and locked up?

CHRIS EVANS: Well it's not for me to comment on a sovereign nation's local legal system. We detain people who come to this country unlawfully as well while we identify them and do security checks, so it's not uncommon for countries to detain people who've come in unlawfully.
Many refugees I met said it's conditions like these that drive people to try and reach Australia.

TAMIL REFUGEE 3: We wont be suffering like this. Once we survive the sea, we'll live in peace. Which is why we want to go to Australia. After a while here, we all hope to go. We can't live like this here.

TAMIL REFUGEE 2: So, instead of living in this situation, if we take the boat at least we’ll be happy there with our children. We have aspirations too.

But the Australian and Malaysian governments want to make sure this never happens. A few weeks ago, they got lucky - 114 Sri Lankans were arrested at these serviced apartments in Johor Bahru. They'd been there for a month waiting for a passage to Australia. Although three men in charge of the group escaped, this counts as a major success.

REPORTER: You would have been pleased about this news?

CHRIS EVANS: Well, we're certainly pleased that they're clamping down on unlawful movement through their country and that obviously has the benefit for us that it may deter people from getting on leaky boats, seeking to come to Australia.
The day after the arrests, I visited the apartments. This is one of the 17 rooms the migrants were squeezed into - six or seven people to a room. One of the staff showed a local journalist and I a list of almost half the group.

JOURNALIST: These are 44 names.
Next to the names, we found their UNHCR registration numbers - 44 refugees who weren't prepared to wait.

JOURNALIST: Pity them, ah?

APARTMENT EMPLOYEE: Because they pay so much to the middle man. I don't know who, ah. Chances are that if the people arrested here last month had reached Australia, they'd have been granted protection visas. Instead, they were locked up and remain as vulnerable as ever.

DAVID MANNE: Cracking down on people smuggling in and of itself is not a problem. The real question is - what is the consequence of doing that? It is one thing to intercept someone in another country and to assist another country, or cooperate with another country like Malaysia to do that, but what happens to that person? That's the question that hangs heavily. What then happens to that person?

CHRIS EVANS: I don't accept the criticism, if you like, that we've got to somehow insist on human rights standards in other countries. We encourage people to sign up to the refugee convention, we encourage them to treat people properly but, equally, I don't think we can be held responsible for every country's domestic policies.

TAMIL REFUGEE 4: At times we contemplate suicide. But we have the children. We're living for the children. We just keep going.

TAMIL REFUGEE 5: For the sake of the children we’ve come to live here. It’s not a certain thing going by boat. If any country accepts us, we'd be happy to go.