Wednesday, September 30, 2009

G-20 : U.S.A. பொலிஸ் அடக்குமுறை ஆதாரங்கள்

ஒபாமாவின் நிர்வாகம் புஷ்ஷை விட சிறப்பாக இருக்கும் எனஎதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் காத்திருக்கின்றது. செப். 24 . பிட்ஸ்பெர்க் நகரில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம் G - 20 மகாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடியது. சாத்வீக வழியில் நடந்த ஊர்வலத்தை கலைக்க காவல்துறை அடக்குமுறைக் கருவிகளைப் பயன்படுத்தியது. ‘Long Range Acoustic Device’ என்ற நவீன ஆயுதம் முதன்முறையாக அமெரிக்க மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டது. இதுவரை காலமும் ஈராக், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நவீன கருவி செவிப்புலனை பாதிக்குமளவு வலி ஏற்படுத்தக் கூடியது. போலிஸ் ஆர்ப்பாட்டக்காரரை விரட்ட ரப்பர் தோட்டாக்களால் சுட்டது. ஊர்வலத்தில் சென்ற 210 பேரை காவல்துறை கண்டபடி கைது செய்தது. சில கைது நடவடிக்கைகள் ஏறக்குறைய ஆட் கடத்தல் போலிருந்தன.

அமெரிக்க பொலிஸ் அராஜகத்தை பதிவு செய்த வீடியோ இது:





No comments: